Friday, May 23, 2014

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மாநில முதல் மதிப்பெண் 499!

தமிழகத்தில் வெளியிடப்பட்ட பத்தாம்
வகுப்பு தேர்வு முடிவுகளில், மொத்தம் 19 பேர் 499 பெற்று, மாநில முதலிடம் பெற்றுள்ளர்.

இது ஒரு புதிய சாதனையாக
பார்க்கப்படுகிறது.
இவர்களில், 18 பேர் பெண்கள் மற்றும் ஒருவர்
ஆண். இரண்டாமிடத்தை, 498
மதிப்பெண்களுடன், 125 பேர்
பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்களில் 101 பேர்
பெண்கள் மற்றும் 24 பேர் ஆண்கள். மேலும்,
மூன்றாமிடத்தை 497 மதிப்பெண்களுடன் 321
பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களில் 246
பேர் பெண்கள் மற்றும் 75 பேர் ஆண்கள்.
அதேசமயம், தமிழை முதல் பாடமாக எடுத்துப்
படிக்காத மாணவர்களில், மொத்தம் 3 பேர்
500க்கு 500 மதிப்பெண்களைப்
பெற்று முதலிடம் பெற்றுள்ளர்.

No comments:

Post a Comment