Tuesday, May 20, 2014

பிளஸ் – 2 மதிப்பெண் சான்றிதழ் நாளை வினியோகம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 75 ஆயிரம் பேர் பிளஸ் – 2 தேர்வு எழுதினார்கள். கடந்த 9–ந் தேதி பிளஸ் – 2 தேர்வு வெளியானது.
92 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் வெற்றி பெற்றனர். மாநில அளவில் மாணவ – மாணவிகள் 1193 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தனர்.பிளஸ் – 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு மதிப்பெண் பட்டியல் நாளை (21–ந் தேதி) வெளியிடப்படுகிறது.அனைத்து பள்ளிகளிலும் காலை 9 மணிக்கு மார்க் பட்டியலை மாணவ – மாணவிகள் பெற்றுக் கொள்ளலாம். அவரரவர் படித்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மூலமாக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் செய்யப்படுகிறது.பள்ளிகள் மூலமாக மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவும், அரசு ஏற்பாடு செய்துள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மாணவ – மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகள் வழியாக ஆன்–லைன் மூலம் பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment