Wednesday, May 07, 2014

திருச்சியில் ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் சரிபார்பு

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு பணி நேற்று திருச்சியில்
துவங்கியது.
தமிழ்நாடு ஆசிரியர்
தேர்வு வாரியத்தால் கடந்த
ஆண்டு ஆசிரியர் தகுதித்
தேர்வு நடத்தப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இந்த
தேர்வில் அரசு அறிவித்துள்ள தளர்வு மார்க் பெற்று, தாள்
2ல் தேர்ச்சி பெற்ற 1,200 பேருக்கு திருச்சி வாசவி மெட்ரிக்
பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று துவங்கியது.
இப்பணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
செல்வக்குமார் துவக்கி வைத்தார். முதல் நாளான நேற்று 225
பேர் பங்கேற்றனர். அவர்களின் சான்றிதழை அதிகாரிகள்
சரிபார்த்தனர். இப்பணி வரும் 12ம் தேதி வரை நடக்கிறது.
அவரவருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் மாவட்ட
முதன்மை கல்வி அலுவலரை நேரில் அணுகுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment