Tuesday, May 20, 2014

காந்திகிராம பல்கலை புதிய துணைவேந்தர்நியமனம்

காந்திகிராம பல்கலை புதிய துணைவேந்தராக, எஸ்.நடராஜன்
நியமிக்கப்பட்டு உள்ளார்.
காந்திகிராம பல்கலை துணைவேந்தராக இருந்த
ராமசாமி, கடந்த 2013, செப்., 9ல், ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, பொறுப்பு துணைவேந்தராக,
ஜோசப்துரைராஜ் பணிபுரிந்தார். புதிய
துணைவேந்தர் நியமிக்க, அண்ணா பொறியியல்
பல்கலை முன்னாள் துணைவேந்தர்,
பாலகுருசாமி தலைமையில், தேர்வுக்குழு
அமைக்கப்பட்டது. துணைவேந்தர் பதவிக்கு,
100க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
தேர்வுக்குழு மூவரை தேர்வு செய்து,
பட்டியலை காந்திகிராம பல்கலை வேந்தர்,
ரெனானா ஜாப்வாலாவுக்கு அனுப்பி வைத்தனர்.
வேந்தர் பரிந்துரையில்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை மண் மற்றும் பயிர்
மேலாண்மை மைய முன்னாள் இயக்குனர்,
எஸ்.நடராஜனை காந்திகிராம பல்கலை புதிய
துணை வேந்தராக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்
துறை நியமித்துள்ளது. இந்த தகவலை,
பல்கலை பதிவாளர் முரளிதரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment