Thursday, May 08, 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

புதுடில்லி: மத்திய அரசின், 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு,
சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு நேற்று வெளியிட்ட
அறிவிப்பின் படி,
குழந்தைகள் கல்விச்
செலவை திருப்பிக்
கொடுக்கும் ஆண்டு உச்ச வரம்பு,
இது வரை, 12 ஆயிரம் ரூபாயாக
இருந்தது. இனிமேல், 18 ஆயிரம்
ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாற்று திறனாளி பெண் ஊழியரின்,
குழந்தை பராமரிப்பு, மாதச்
செலவுத்தொகை, 1,000
ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக
உயர்த்தப்பட்டுள்ளது.
அது போல், ஊழியர்களின், மாற்றுத்
திறனாளி குழந்தையின் கல்விச்
செலவுத்
தொகையை திருப்பி கொடுப்பதற்கான
ஆண்டு உச்சவரம்பு தொகை, 24 ஆயிரம்
ரூபாயிலிருந்து, 36 ஆயிரம் ரூபாயாக
உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில்,
மத்திய அரசு ஊழியர்களின்
அகவிலைப்படி, 100 சதவீதமாக உயர்த்தப்
பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment