Tuesday, May 13, 2014

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் வழங்கினார்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் வழங்கினார்.

திருச்சி மாவட்டத்தில் நடந்து முடிந்த
பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம்
தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின்
தலைமை ஆசிரியர்கள் மற்றும்
அரசு பள்ளிகளில் 1,100
மதிப்பெண்கள் மற்றும்1,050
க்கு மேல் பெற்ற மாணவ,
மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும்
நிகழ்ச்சி நேற்று திருச்சி மாவட்ட
கலெக்டர் அலுவலகத்தில்
நடைபெற்றது.
100 சதவீத தேர்ச்சி
இந்த நிகழ்ச்சியில் 100 சதவீதம்
தேர்ச்சி பெற்ற கொளக்குடி, மூவானூர்,
கல்லகம், அய்யம்பாளையம், கீழ
அன்பில், வாயையூர்,
திருச்செந்துறை அரசு பள்ளிகளின்
தலைமை ஆசிரியர்கள், புத்தூர்
பார்வையற்றோர் அரசு பள்ளி,
பழங்குடியினர் உண்டு, உறைவிட
பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள்
பெற்று முதல் 3 இடங்களை பிடித்த
மாணவ, மாணவிகள் உள்பட மொத்தம் 38
பேருக்கு கலெக்டர் ஜெயஸ்ரீ
முரளிதரன் புத்தகங்களை பரிசாக
வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட
முதன்மை கல்வி அதிகாரி செல்வகுமார்
, மாவட்ட கல்வி அதிகாரிகள்
செல்வராஜ் (முசிறி),
தண்டாயுதபாணி மற்றும்
பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ-
மாணவிகளின் பெற்றோர்
கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment