Wednesday, June 25, 2014

விலையில்லா ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு விலை வைக்கப்படுகிறதா??

ஆசிரியர்களுக்கான
பணி இடமாறுதலுக்கான கலந்தாய்வு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது
அவற்றில் சில
பள்ளிகளில் இருந்த உபரி ஆசிரியர்
பணியிடங்கள் நிரவல் மூலம்
சரிபடுத்தப்பட்டன.இந்நிகழ்வின்
போது சில பள்ளிகளில் இருந்த சில
காலிப்பணியிடங்கள்
மறைக்கப்பட்டுவிட்டன காரணம் மாவட்ட
மாறுதல் கோருபவர்களுக்காக என்ற
பேச்சு ஆசிரியர்கள் மத்தியில்
எழுந்துள்ளது.
அவ்வாறு மறைக்கப்பட்டுள்ள
இடங்களுக்கு யாரை அனுப்புவீர்கள்
என்று சங்கப் பொறுப்பாளர்கள்
வினவினால் அதற்கு உரிய
பதிலை அதிகாரிகள் தரத்
தயங்குகின்றனர்.ஒரு வேலை தமிழக
அரசால் விலை இல்லாமல் வழங்கப்படும்
பணிஇடமாறுதலுக்கு அதிகாரிகளால்
விலை வைக்கப்படுகிறதா என்ற அச்சம்
ஆசிரியர்கள் மத்தியில்
எழுந்துள்ளது..தன் சொந்த ஒன்றியத்தில்
பாதிக்கப்பட்ட ஒரு நிரவல் பணியிடத்தில்
உள்ள ஒரு ஆசிரியர் பெறமுடியாத
இடத்தை வேறு மாவட்டத்தில் உள்ள
ஒரு ஆசிரியர் பெற
முடிகிறது என்றால் நியாயமா?
நடுநிலைவாதிகள் வருத்தம்
மட்டுமே அடைகிறார்கள்
என்பதே உண்மை.

No comments:

Post a Comment