Friday, July 18, 2014

பி.எட் . படிப்பில் சேர 19– ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பி . எட் . படிப்பில் சேர 19– ந்தேதி முதல்
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
என்றுதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி .
விஸ்வநாதன் தெரிவித்தார் .

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி .
விஸ்வநாதன் நேற்று நிருபர்களிடம்
கூறியதாவது :– பி . எட் .
படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் அரசு மற்றும்
அரசு உதவிபெறும் பி . எட் . கல்லூரிகள்
21 உள்ளன . 649 சுயநிதி பி . எட் .
கல்லூரிகள் இருக்கின்றன . இவற்றில்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் 21
கல்லூரிகளில் 2 ஆயிரத்து 400 பி . எட் .
இடங்கள் உள்ளன . அந்த
இடங்களுக்கு மட்டும் ஒற்றைச் சாளற
முறையில் கலந்தாய்வு நடத்தி மாணவ –
மாணவிகளை சேர்க்க உள்ளோம் . இந்த
கலந்தாய்வு முதல் முதலாக
பல்கலைக்கழகம் மூலம்
செயல்படுத்தப்பட உள்ளது . பி . எட் .
படிக்க விரும்பும் மாணவ – மாணவிகள்
ஆன்லைன் மூலம்
மட்டுமே விண்ணப்பிக்க முடியும் . 19–
ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் .
இதற்காக தமிழ்நாடு முழுவதும் 29
மையங்கள்ஏற்படுத்தப்பட்டுள்ளன .
சென்னையில் தமிழ்நாடு ஆசிரியர்
கல்வியியல் பல்கலைக்கழகம் 3
மையங்கள் ஏற்படுத்தி அவற்றில்
சென்னை , திருவள்ளூர் ,
காஞ்சீபுரம்ஆகிய
மாவட்டத்தை சேர்ந்தவர்கள்
விண்ணப்பிக்கலாம் . அதுபோல தர்மபுரி ,
கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்
கள் தர்மபுரியில் உள்ள மையத்தில்
விண்ணப்பிக்கலாம் . மற்ற
மாவட்டங்களில் உள்ளவர்கள் அந்தந்த
மாவட்டங்களில் உள்ள
மையத்தை நாடலாம் . இது பற்றிய
முழுவிவரமும் இணையதளத்தில்
( www.onlinetn.com ) தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த இணையதளம் 19– ந்தேதி தான்
செயல்படத் தொடங்கும் .
அன்று விவரங்களை அறிந்து கொள்ளலாம்
. 28– ந்தேதி கடைசி நாள் விண்ணப்பிக்க
மாணவ – மாணவிகள் அந்த
மையங்களுக்கு செல்லும்போது ,
புகைப்படம் வைத்திருந்தால்
கொண்டு செல்லுங்கள் .
இல்லையென்றால்
உங்களை அதிகாரிகளே புகைப்படம்
எடுப்பார்கள் . விண்ணப்பிக்க
அத்தனை உதவிகளையும் செய்வார்கள் .
தப்பாக விண்ணப்பிக்க முடியாத
அளவுக்கு விண்ணப்பிக்க
ஏற்பாடு செய்துள்ளோம் .
எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்
து பல்கலைக்கழகத்தை சேர்ந்த 29
பேராசிரியர் மற்றும்
உதவி பேராசிரியர்களுக்கு முறையாக
பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது .
விண்ணப்பித்தவர்களுக்கு ரசீது கொடுக்
கப்படும் . விண்ணப்பிக்க 28–
ந்தேதி கடைசி நாள் . பல்கலைக்கழக
இணைய தள முகவரி www.tnteu.in
கலந்தாய்வு 28– ந்தேதிக்கு பிறகு 3
அல்லது 4 நாட்கள் கழித்து ரேங்க்
பட்டியல் வெளியிடப்படும் . பாடம்
வாரியாக வெளியிடப்பட உள்ளது .
பின்னர் ரேங்க் மற்றும்
கலந்தாய்வு தேதி அனைத்து மாணவ –
மாணவிகளுக்கும் எஸ் . எம் . எஸ் .
மூலம் அனுப்பப்படும் . செல்போன்
மற்றும் பி . எஸ் . என் . எல் .
தரைவழி ( லேண்ட் லைன் )
தொலைபேசி மூலமும்
பேசி தெரிவிக்கப்படும் . எம் . எட் .
படிப்பில் சேர
விண்ணப்பிப்பது குறித்து பின்னர்
அறிவிக்கப்படும் .
இவ்வாறு துணைவேந்தர் பேராசிரியர் ஜி .
விஸ்வநாதன் தெரிவித்தார் .

No comments:

Post a Comment