Thursday, July 10, 2014

மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய
நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார்.

2014-15 நிதியாண்டுக்கான இந்த
பட்ஜெட்டில், வருமான
வரி விகிதங்களில் எவ்வித மாற்றமும்
செய்யப்படவில்லை. எனினும், தனிநபர்
வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2
லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக (ரூ.50,000)
உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சிறிய
மற்றும் மிகச்சிறிய
வரிவிதிப்பிற்கு உரியவர்களுக்கு சாதகமாக
இருக்கும் வகையில் அமைந்துள்ளது.
வருமான வரிச் சட்டப்பிரிவு 80(சி)-ன் கீழ்
முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில்
இருந்து ரூ.1.5 லட்சமாக
உயர்த்தப்பட்டுள்ளதும்
அவர்களுக்கு சாதகமானதே.
சொந்த வீட்டில் குடியிருப்பவர்
பெறும் வீட்டுக்கடன் மீதான
வட்டிக்கு அளிக்கப்படும் விலக்கு வரம்பு ரூ. 1.5
லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக
உயர்த்தி அறிவித்துள்ளார்.
உற்பத்தி வரிவிதிப்பின் மூலம், சிகரெட்
உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின்
விலை அதிகரிக்கிறது. வரிவிலக்கு மூலம்
ஏழை மக்கள் பயன்படுத்தும்
சிஆர்டி தொலைக்காட்சிகள்
விலை குறைகிறது. அந்நிய நேரடி முதலீடு மூலம்
கூடுதல் நிதி ஆதாரம் திரட்ட குறிப்பிட்ட சில
துறைகளில் அந்நிய
நேரடி முதலீடு ஊக்குவிக்கப்படும் என
நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
13.09 PM: பட்ஜெட் உரையை அருண்
ஜேட்லி நிறைவு செய்தார்.
13.06 PM: பயோ - மெடிக்கல் கழிவு அகற்றும்
பணிக்கு சேவை வரியில் விலக்கு.
13.05 PM: தொலைக்காட்சி, ஆன்லைன்
விளம்பரங்களுக்கு சேவை வரி விதிப்பு.
அச்சு விளம்பரங்களுக்கு சேவை வரியில்
விலக்கு அளிக்கப்படுகிறது.
13.00 PM:
புகையிலை பொருட்களுக்கான
உற்பத்தி வரி 22% அதிகரிக்கப்படுகிறது.
12.59 PM: கல்வி வரியில் மாற்றமில்லை.
வருமான வரியில் கல்விக்கான வரி 3%
ஆகவே நீடிக்கும் என அறிவிப்பு.
12.58 PM: நாடு முழுவதும் புதிதாக 60
வருமான வரிச் சேவை மையங்கள் அமைக்கப்படும்.
12.55 PM: நேரடி வரி, மறைமுக வரி வசூல்
இலக்கு இடைக்கால பட்ஜெட்டில்
நிர்ணயிக்கப்பட்டதே பின்பற்றப்படும்.
12.50 PM: ரூ. 25 கோடிக்கு மேல்
முதலீடு செய்யும்
உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும்.
மூன்று ஆண்டுகளுக்கு 15%
வரிச்சலுகை வழங்கப்படும்.
12.47 PM: வரிவிதிப்பின் மூலம் ரூ.9.77 லட்சம்
கோடி வருவாய் ஈட்டலாம் என
அரசு எதிர்பார்க்கப்படுகிறது.
12.46 PM: 80(சி) பிரிவின் கீழ் முதலீட்டிற்கான
வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5
லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
12.45 PM: வீட்டுக் கடனுக்கான வரிச்
சலுகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக
உயர்வு.
12.44 PM: சேமிப்புக்கான
வரி விலக்கு வரம்பு ரூ.1 லட்சமாக உயர்வு.
12.43 PM: தனிநபர் வருமான
வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 2 லட்சத்தில்
இருந்து ரூ.2.5 லட்சமாக
உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த
குடிமக்களுக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3
லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
12.42 PM: வருவாய் பற்றாக்குறை ஜி.டி.பி.யில்
2.1% ஆக இருக்கும்.
12.40 PM: வடகிழக்கு மாநிலங்களுக்காக
பிரத்யேகமாக 'அருண் பிரபா' என்ற 24
மணி நேர
தொலைக்காட்சி அலைவரிசை துவங்கப்படும்.
12.38 PM: வடகிழக்கு மாநிலங்களில் ரயில்
சேவையை மேம்படுத்த ரூ.1000 கோடி கூடுதல்
நிதி ஒதுக்கப்படுகிறது.
12.35 PM: இமாலய
மலை தொடர்பான
படிப்புகளை மேற்கொள்ள
உத்தராகண்டில் தேசிய
அகாடமி நிறுவப்படும்.
12.30 PM: இடம்பெயர்ந்த
காஷ்மீரிக்கள் மறுவாழ்விற்கு ரூ.500
கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
12.26 PM: கங்கை நதியை சுத்தப்படுத்த
வெளிநாடு வாழ் இந்தியர் நிதி திட்டம்.
12.25 PM: கங்கை நதியை தூய்மைப்படுத்தி, மேம்படுத்த
ரூ.2037
கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நமாமி கங்கா ("Namami Ganga") என
இத்திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
12.25 PM: வரவிருக்கும் காமன்வெல்த்
போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய
வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.100
கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
12.24 PM: மணிப்பூரில் விளையாட்டுப்
பல்கலைக்கழகம் நிறுவப்படும். தேசிய
விளைடாட்டு அகாடமி அமைக்கப்படும்.
12.23 PM: தற்போது நாடு முழுவதும் 15,000 கிமீ
தூரத்திற்கு எரிவாயு குழாய்கள்
இருக்கின்றன. பொதுத்துறை -
தனியார் துறை பங்களிப்பில்
இது இருமடங்காக அதிகரிக்கப்படும்.
12.07 PM: காஞ்சிபுரம், மதுரா உள்ளிட்ட
இடங்களில் தேசிய பாரம்பரிய
சின்னங்களை பராமரிக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு.
12.20 PM: 6 சிறப்புப் பொருளாதார
மண்டலங்கள் அமைக்கப்படும்.
12.19 PM: தொழில்நுட்ப
வளர்ச்சிக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.
12.18 PM: ரூ.100 கோடி செலவில் போர்
நினைவிடம் கட்டப்படும்.
12.17 PM: மூத்த குடிமக்களுக்கான
பென்சன் திட்டம் மறு சீரமைக்கப்படும்.
12.16 PM: கிராமப்புற
சாலை மேம்பாட்டுக்கு ரூ.14,389 கோடி பிரதான்
மந்திரி கிராம் சடக் யோஜனா திட்டத்தின் கீழ்
ஒதுக்கப்படும்.
12.15 PM: புதிய மருத்துவக் கல்லூரிகள் இந்த
நிதியாண்டில் அமைக்கப்படும்.
12.12 PM: தமிழகம் மற்றும் ராஜஸ்தானில்
ரூ.500 கோடி செலவில் சூரிய
மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படும்
12.12 PM: இயற்கை விவசாயத்தை மேம்படுத்த
ரூ.100 கோடி ஒதுக்கப்படும்.
12.11 PM: புதிய
யூரியா கொள்கை கொண்டு வரப்படும்
12.10 PM: விவசாயிகளுக்கு 7%
வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.
விவசாய கடன்களை சரியாக திரும்ப
செலுத்தும் விவசாயிகளுக்கு 3%
ஊக்கத் தொகை வழங்கப்படும்.
12.09 PM: நடப்பு நிதியாண்டில் விவசாய
கடனாக ரூ.8 லட்சம் கோடி வழங்க
இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
12.08 PM: வேளாண் துறையில், 4%
வளர்ச்சியை எட்ட நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
12.05 PM: படிப்படியாக
அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ்
மருத்துவமனை ஏற்படுத்தப்படும்.
ஏற்கெனவே புதிதாக அமைக்கப்பட்ட 6
எய்மஸ் மருத்துவமனைகளும் செயல்படத்
துவங்கியுள்ளன. மேலும் 4 எய்ம்ஸ்
மருத்துவமனைகள் அமைக்க இடம்
தேர்வு செய்யப்படும்.
12.02 PM: சமுதாய
வானொலி திட்டத்துக்கு ரூ.100
கோடி ஒதுக்கீடு.
12.01 PM: 2019-ஆம் ஆண்டுக்குள்
நாடு முழுவதும் எல்லா வீடுகளிலும்
கழிவறை வசதி ஏற்படுத்தப்படும்.
12.00 PM: கிராமப்புற வீட்டு வசதிக்கு ரூ.8000
கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கிராமப்புற குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.3,600
கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
11.56 AM: விவசாயத்தில் புதிய
யுக்திகளை அறிமுகப்படுத்த அசாம்,
ஜார்கண்ட் மாநிலங்களில் சிறப்பு மையம்
அமைக்கப்படும்.
11.55 AM: நிலமில்லாத 5 லட்சம்
விவசாயிகளுக்கு 'நபார்ட்' வங்கி மூலம்
நிதியுதவி வழங்க பரிந்துரை.
11.54 AM: காக்கிநாடா துறைமுகத்தில்,
வன்பொருள் ஏற்றுமதிகளை கையாளும்
மையம் உருவாக்கப்படும்.
11.54 AM: ரூ.100 கோடி செலவில்
மதரஸாக்கள் நவீனப்படுத்தப்படும்.
11.54 AM: கிராமங்களில் மின்சார
வசதியை மேம்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
11.54 AM: கிராமப்புறங்களில் சுகாதார
சேவையை மேம்படுத்த, நவீனமயமாக்கப்பட்ட 15
மாதிரி கிராம சுகாதார மையங்கள்
நிறுவப்படும்.
11.52 AM: விவசாய
சேமிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 5000
கோடி ஒதுக்கீடு.
11.50 AM: தெலுங்கானாவில்
தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
ஆந்திரம் மற்றும் ராஜஸ்தான்
மாநிலங்களில் வேளாண்
பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.
11.48 PM: பஞ்சாப், இமாச்சல பிரதேசம்,
பிஹார், ஒடிசா, ராஜஸ்தானில்
ஐ.ஐ.எம்.கள் அமைக்கப்படும்.
11.47 AM: ரூ.500 கோடி செலவில் மேலும் 5
ஐ.ஐ.டி.க்களும், 5 ஐ.ஐ.எம்.களும்
நிறுவப்படும். ஜம்மு, சத்தீஸ்கர், ஆந்திரம்,
கேரளா, கோவா ஆகிய மாநிலங்களில்
ஐ.ஐ.டி.,கள் அமைக்கப்படும்.
11.46 AM: பெருநகரங்களில்
பெண்கள் பாதுகாக்காக ரூ.150
கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
11.45 AM: பெண்கள் தங்களுக்கு ஏற்படும்
இடர்பாடுகளுக்கு தீர்வு காண
டெல்லியில் சிறப்பு உதவி மையம்
அமைக்கப்படும்.
11.41 AM: ஆண் - பெண் பாலின
பாகுபாடை தவிர்க்க பள்ளிகளில்
இது தொடர்பான
விழிப்புணர்வு கல்வி பாடத்திட்டத்தில்
சேர்க்கப்படும்.
11.40 AM: பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ திட்டம்
(Beti Bachao, Beti Padhao yojana) ரூ.100
கோடி செலவில் அமலுக்கு வருகிறது.
11.39 AM: பிரெயில் எழுத்துக்களுடன் கூடிய
ரூபாய் நோட்டுகள் அமலுக்கு வரும், இதற்காக
15 பிரெயில் அச்சகங்கள் அமைக்கப்படும்.
11.38 AM: வரிச் சட்டங்களில் தேவையான
மாற்றங்களை மேற்கொள்ள
தொழில்துறையுடன் ஆலோசிக்க
சிறப்பு குழு அமைக்கப்படும்.
11.37 AM: பாதுகாப்புத்துறை, காப்பீட்டுத்
துறையில் அந்நிய நேரடி முதலீடு 49
சதவிகிதமாக அதிகரிக்கப்படும்.
11.35 AM: அந்நிய நேரடி முதலீடு மூலம் கூடுதல்
நிதி ஆதாரம் திரட்ட குறிப்பிட்ட சில துறைகளில்
அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிக்கப்படும்.
11.33 AM: அந்நிய முதலீட்டாளர்கள்
இந்தியாவின் வளர்ச்சியில்
நம்பிக்கை கொள்ள வேண்டும்.
முதலீட்டாளர்களுக்கு ஏற்றவாறு நிலையான
வரி விதிப்பு முறையை கொண்டு வரப்படும்.
11.30 AM: தாழ்த்தப்பட்ட மக்கள்
வளர்ச்சிக்காக ரூ.50,548
கோடி ஒதுக்கப்படுகிறது.
11.29 AM: ரூ.200 கோடி செலவில் குஜராத்
மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல்
சிலை நிறுவப்படும்.
11.27 AM: சுகாதார மேம்பாட்டிற்கு 'பாரத்
ஸ்வச் யோஜனா' செயல்படுத்தப்படும்.
11.25 AM: நீர்பாசனத்தை மேம்படுத்த ரூ.1000
கோடி ஒதுக்கப்படும். இதற்காக 'பிரதான்
மந்திரி கிருஷி சிச்சாயின் யோஜனா'
செயல்படுத்தப்படும்.
11.22 AM: 9 நகரங்களில் இ- விசா திட்டம்
அறிமுகப்படுத்தப்படும்.
11.20 AM: கிசான் விகாஸ் பத்திர திட்டம்
விரிவாக்கம் செய்யப்படும்.
11.19 AM: வீடுகளுக்கு 24 மணி நேரம் மின்சார
வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
11.18 AM: 100 நவீன நகரங்களை உருவாக்க
ரூ.7060 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
11.17 AM: வங்கிகளுக்கு கூடுதல்
சுயாட்சி அதிகாரம் அளிக்க
வழிவகை செய்யப்படும்.
11.15 AM: உற்பத்தித் துறையிலும், கட்டுமானத்
துறையிலும்
வளர்ச்சியை துரிதப்படுத்துவது அவசியம்.
11.13 AM: வறுமை ஒழிப்புத்
திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
11.12 AM: அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின்
பொருளாதார வளர்ச்சியை 7%
முதல் 8% வரை அதிகரிப்பதே இலக்கு.
11.11 AM: வரி விவகாரங்களை கையாள
உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.
11.11 AM: மானியங்கள், எரிபொருள்
பொருளாதார
கொள்கைகள், உரங்களுக்கான
மானியம் மறு சீரமைக்கப்படும்.
11.10 AM: பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்.
நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.1% என்ற
சவாலான இலக்கை எட்ட நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
11.10 AM: கவர்ச்சித் திட்டங்கள், அநாவசிய
செலவினங்களை அரசு தவிர்க்க வேண்டும்.
அரசு செலவினங்களை நிர்வகிக்க
தனியாக ஒரு ஆணையம் அமைக்கப்படும்.
11.09 AM: இந்திய
பொருளாதாரத்தை சீர்படுத்த மிக
முக்கியமான, துணிச்சலான முடிவுகள்
மேற்கொள்ளப்படும்.
11.08 AM: இராக் உள்நாட்டு சர்ச்சையும்,
பருவமழை எதிர்பார்த்த அளவைவிட குறைவாக
பெய்துள்ளதும் இந்திய
பொருளாதாரத்தில்
தாக்கத்தை ஏற்படுத்தும்.
11.08 AM: கடந்த 2 ஆண்டுகளாக
தொடர்ந்து பொருளாதார
வளர்ச்சி 5%-க்கும் குறைவாக
இருந்தது இந்தியப்
பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய
சவாலை ஏற்படுத்தி உள்ளது.
11.05 AM: மக்களின் எதிர்பார்ப்புகள்
அதிகமாக இருக்கிறது என்பதை மத்திய
அரசு உணர்ந்து இருக்கிறது.
11.04 AM: வேலையில்லா திண்டாட்டம்,
விலைவாசி உயர்வை இனியும்
அரசு பொறுத்துக்
கொள்ளாது.
11:00 AM: மக்களவையில் மத்திய
பட்ஜெட்டை தாக்கல் செய்து,
நிதியமைச்சர் அருண்
ஜேட்லி உரையாற்றி வருகிறார்.

No comments:

Post a Comment