Thursday, July 17, 2014

நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவிப்பு

நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.
75 ஆசிரியர்
சார்ந்த பணியிடங்கள், 340 ஆசிரியர் சாராத
பணியிடமும் நிரப்பப்படும்
என்று தெரிவித்துள்ளார். பழங்குடியினர் அதிகம்
உள்ள 5 மாவட்டத்தில்
மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்படும்
என்றும் அவர் கூறியுள்ளார். 482 அரசுப்
பள்ளிகளில் 4,782
மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்டும்
என்றும் வீரமணி தெரிவித்துள்ளார். 32
மாவட்டங்களிலும் நடப்பாண்டு அறிவியல்
கண்காட்சிகள் நடத்தப்படும் என்றும்
வீரமணி தெரிவித்துள்ளார்.
7 மாவட்டங்களில் நடப்பாண்டில் நடமாடும்
நூலகங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர்
அறிவித்துள்ளார். விருது பெற்ற
தமிழாசிரியர்களுக்கு அரசு பேருந்தில் இலவச
பயண அட்டை வழங்கப்படும் என்றும் அவர்
தெரிவித்துள்ளார். பன்னாட்டு திருக்குறள்
மாநாடு இந்த ஆண்டில் நடத்தப்படும்
என்று அமைச்சர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment