Tuesday, July 08, 2014

ரயில்வே பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்: தமிழகத்திற்கு 5 ரயில்கள் உட்பட 58 புதிய ரயில்கள் அறிவிப்பு!

2014-15 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
இதில் 58 புதிய ரயில்கள் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள்
வெளியிடப்பட்டன.
3,700 கி.மீட்டருக்கு புதிய பாதை
* புகழ் பெற்ற நிறுவனங்களின்
உணவுப்பொருட்களை ரயில்களில்
அறிமுகம் செய்ய திட்டம்.
* ரயில் நிலையங்களில்
தூய்மைப்படுத்தும் பணிகள்
கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
* அனைத்து ரயில்களும், ரயில்
நிலையங்களும் சுத்தமாக
பராமரிக்கப்படும்.
* எரிபொருள் விலைக்கு ஏற்ப
கட்டணங்களை அவ்வப்போது
மாற்றியமைக்க வேண்டும்
* சிறிய அளவிலான புதிய திட்டங்கள்
இந்தாண்டு
நடைமுறைப்படுத்தப்படும்.
* அடுத்த 10 ஆண்டுகளில் 3,700
கி.மீட்டருக்கு புதிய
பாதை அமைக்க ரூ.41,000
கோடி செலவிடப்படும்.
தனியார் பங்களிப்பு தேவை
* ரயில்வேத்துறையை மேம்படுத்த
தனியார் பங்களிப்பு தேவை
* 2013-14ல் ரயில்வேயின்
செயல்பாட்டு லாபம் குறைந்தது.
* எந்த நடைமேடைக்கும் செல்ல
பேட்டரி வாகனங்களை இயக்க திட்டம்.
குடிநீர்,
கழிவறை வசதிகளை மேம்படுத்த
திட்டம்
* அனைத்து ரயில் நிலையங்களில்
குடிநீர்,
கழிவறை வசதிகளை மேம்படுத்த
திட்டம்.
* வைர நாற்கரத்
திட்டத்தை நிறைவேற்ற ரூ.9 லட்சம்
கோடி தேவை
* புல்லட் ரயில்களை இயக்க ரூ.60,000
கோடி தேவைப்படுகிறது.
* ரயில்வேயை நவீனமயமாக்க அடுத்த
10 ஆண்டுகளில் ரூ.5 லட்சம்
கோடி தேவை.
* பயணிகளுக்கான ரயில்
சேவை தருவதில் இழப்பு 130
சதவீதமாக அதிகரித்துள்ளது.
* வர்த்தக நிறுவனம் போல் ரயில்வே,
வருவாய் ஈட்டும் என எதிர்பார்ப்பு.
* ரயில் கட்டண உயர்வு கடினமானது.
ஆனால், தவிர்க்க முடியாதது.
* பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல்
வேறு ஆதாரங்கள் மூலம்
ரயில்வேக்கு நிதிதிரட்ட முடிவு
* உள்நாட்டு, அந்நிய
நேரடி முதலீடுகள் மூலம்
நிதி திரட்டப்படும்.
* ரயில் கட்டண உயர்வால் 8 ஆயிரம்
கோடி கூடுதல் வருவாய்
கிடைக்கும்.
* ஒரு பயணியை ஒரு கிலோ மீட்டர்
அழைத்துச் செல்ல 10 காசுகளாக
இருந்த
செலவு தற்போது பைசாவாக
உயர்ந்துள்ளது.
*
சரக்கு போக்குவரத்து தற்போது 31
சதவீதம் மட்டுமே உள்ளது.
* ரயில்கள் மூலம் 31 சதவீதம் சரக்குகள்
மட்டுமே கொண்டு
செல்லப்படுகின்றன.
வரவு 1 ரூபாய்...செலவு 94 காசுகள்
* ஒவ்வொரு ரூபாய் வரவிலும் 94
காசுகள் செலவாகி விடுகிறது.
* ரயில் கட்டணங்களை நிர்ணபிப்பதில்
சீரான நடைமுறைகள் இல்லை.
* கடந்த காலங்களில், முதலீடுகள்
தவறான வழிகளில்
செலவழிக்கப்பட்டுள்ளன.
* உலகின் மிகப்பெரிய
சரக்கு எடுத்துச் செல்லும்
துறையாக
ரயில்வேத்துறை எடுத்து செல்ல
திட்டம்.
* ரயில் இணைப்பு இல்லாமல் உள்ள
இடங்களில்
சேவை தொடங்குவது சவாலானது
.
100 கோடி டன் சரக்குகள்
* இந்தியன் ரயில்வே இந்தியாவின்
அடையாளமாக
ஓடிக்கொண்டிருக்கிறது.
* 100 கோடி டன் சரக்குகளை ரயில்வே
கையாளுகிறது.
* பாதுகாப்புப்படையினரின்
முதுகெலும்பாக
ரயில்வேத்துறை செயல்படுகிறது.
* நிலுவையில் உள்ள
திட்டங்களை நிறைவேற்ற
ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம்
கோடி வீதம் தேவை.
*
சரக்கு போக்குவரத்து தற்போது 31
சதவீதம் மட்டுமே உள்ளது.
* ரயில்வே துறை சவால் நிறைந்தது
* பதவியேற்ற ஒரு மாதத்தில் புதிய
சேவைகளை தொடங்க பல
கோரிக்கைகள் வந்துள்ளன.
* ரயிலில் இதுவரை பயணிக்காத
மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர்.
30 லட்சம் ஊழியர்கள்
* 2.3 கோடி பயணிகள் தினமும் ரயில்
சேவையை பயன்படுத்துகின்றனர்.
* 30 லட்சம்
ஊழியர்களை கொண்டது இந்திய
ரயில்வேத்துறை.
* திட்டங்களை அறிவிப்பதை விட
செயல்படுத்துவதில் அதிக கவனம்
செலுத்த வேண்டியதுள்ளது
* ரயில்வே துறையில் தேவைக்கும்,
கிடைக்கும் வருவாய்க்கும்
மிகப்பெரிய
இடைவெளி காணப்படுகிறது.
முந்தைய கட்டண கொள்கை சமச்சீராக
இல்லை;
உணவு வசதி, ஆன்லைன்
புக்கிங்குகளுக்கு முன்னுரிமை
* கட்டண
உயர்வு மட்டுமே ரயில்வே துறையை
மேம்படுத்தாது; மற்ற வாய்ப்புகள்
குறித்தும் பரிசீலிக்க வேண்டிய
அவசியம் உள்ளது.
* உணவு வசதி, ஆன்லைன்
புக்கிங்குகளுக்கு முன்னுரிமை
அளிக்கப்படும்
ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெற்ற
சிறப்பு அம்சங்கள் வருமாறு:
* 58 புதிய ரயில்கள் அறிமுகம்
* அகமதாபாத்- சென்னைக்கு புதிய
ரயில் இயக்கப்படும்.
* தொழில்நுட்பம்- தொழில்நுட்பம்
சாரா படிப்புகளுக்காக
ரயில்வே பல்கலைக்கழகம்
* அனைத்து ரயில் நிலைய
கூரைகளில் சூரிய மின்சக்தி திட்டம்
அமைக்கப்படும்.
* ஆளில்லா லெவல்
கிராசிங்கை அகற்ற ரூ.1800
கோடி ஒதுக்கீடு
* விழாக்காலங்களில்
வேளாங்கண்ணி,
மேல்மருவத்தூருக்கு சிறப்பு ரயில்
சேவை தொடரும்.
* சாலிமார்- சென்னை, ஜெய்ப்பூர்-
மதுரை ஏ.சி. விரைவு ரயில்கள்
விரிவுபடுத்தப்படும்.
* சரக்கு பெட்டிகள் புதிய
வடிவமைப்பில் உருவாக்கப்படும்.
* சரக்கு ரயில்களில் பால், காய்கறி,
பழம் கொண்டு செல்ல
அனுமதிக்கப்படும்.
* பயணிகளை குறி்த்த நேரத்தில்
எழுப்பும் வசதி செய்யப்படும்.
* வடகிழக்கு மாநிலங்களில் ரயில்
திட்டங்களுக்கு 54 சதவிகிதம்
நிதி ஒதுக்கீடு.
* ரயில்வே வாரியம்
மாற்றி அமைக்கப்படும்.
சென்னைக்கு அதிவேக ரயில்
* புதிய துறைமுகங்களுக்கு ரயில்
சேவை வழங்கப்படும்.
* ரயிலின் வருகை,
புறப்பாடு குறித்து குறுந்தகவல்
மூலம் தெரிவிக்க ஏற்பாடு.
* மைசூர்- பெங்களூர்-
சென்னைக்கு அதிவேக ரயில்
அறிமுகப்படுத்தப்படும்.
* சில ரயில்களின் வேகம் 160 கி.மீட்டர்
முதல் 200 கி.மீட்டர்
வரை அதிகரிக்கப்படும்.
வைஃபை வசதி அறிமுகம்
* ஏ1 மற்றும் ஏ அந்தஸ்து உள்ள ரயில்
நிலையங்களில் வைஃபை வசதி
அறிமுகப்படுத்தப்படும்.
குறிப்பிட்ட ரயில்களிலும்
வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.
* பார்சல்களை பாதுகாக்க தனியார்
உதவியுடன் ரயில் நிலையங்களில்
மையங்கள் அமைக்கப்படும்.
* அனைத்து ரயில் நிலையங்களிலும்
தானியங்கி டிக்கெட் வழங்கும்
வசதி அமைக்கப்படும்.
முன்பதிவு இல்லாத
பெட்டிகளுக்கும் இணையத்தில்
டிக்கெட்
* முன்பதிவு செய்யாத ரயில்
பெட்டிகளுக்கு இணையத்தில்
டிக்கெட் வாங்கும்
வசதி ஏற்படுத்தப்படும்.
* ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித
தலங்களை இணைக்க
சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
* முக்கிய நகரங்களுக்கு அதிவேக
ரயில்களை இயக்க ரூ.100
கோடி ஒதுக்கீடு.
* சுத்தப்படுத்துதலில் தேர்ந்த
நிறுவனங்களின்
உதவியை ரயில்வே பெறும்.
* கட்டமைப்புகளை மேம்படுத்த
உள்நாடு, வெளிநாடுகளில்
இருந்து முதலீடு கோரப்படும்.
* 2014-15ஆம் ஆண்டில் ரயில்வேயின்
செலவினம் ரூ.1,49,176 கோடியாக
இருக்கும்.
* நடைமேடை டிக்கெட்டை
இணையத்தில் பெற
நடவடிக்கை எடுக்கப்படும்.
புல்லட் ரயில்கள்
* மும்பை- அகமதாபாத் மார்க்கத்தில்
புல்லட் ரயில் அறிமுகம்
செய்யப்படும்.
* மகளிருக்கான ரயில் பெட்டிகளில்
பெண் காவலர்களுக்கு செல்போன்
வழங்கப்படும்.
* ரயில்வே பாதுகாப்பு படையில் 4
ஆயிரம் பெண்கள் பணியமர்த்தப்படுவர்.
* தபால் நிலையம், செல்போன் மூலம்
டிக்கெட்
முன்பதிவு விரிவுபடுத்தப்படும்.
* 30 ஆண்டுகளுக்கு முன்பு
அறிவிக்கப்பட்ட திட்டங்களில்
நான்கு திட்டங்கள் இன்னும்
முடிக்கப்படவில்லை.
* ரயில்களில்
பயோ டாய்லெட்டுகளின்
எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
* ரயில்வேயில் அந்திய
நேரடி முதலீடுக்கு மத்திய
அமைச்சரவையின் ஒப்புதல்
தேவைப்படுகிறது.
* முக்கிய ரயில் நிலையங்களில்
தனியார் உதவியுடன் லிஃப்ட்
அமைக்கப்படும்.
* ரயில் நிலையம் மற்றும் ரயில்களில்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
வழங்கப்படும்.
* 50 ரயில்
நிலையங்களை ஏஜென்சிகள் மூலம்
பராமரிக்க நடவடிக்கை.

No comments:

Post a Comment