Thursday, July 03, 2014

ஜுலை 7ம் தேதி தொடங்குகிறது பொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங்

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து ஒத்திவைக்கப்பட்ட தமிழ்நாடு பொறியியல் கவுன்சிலிங், ஜுலை 7ம்
தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும், தமிழகம் தழுவிய பொறியியல்
சேர்க்கைக்கான
கவுன்சிலிங்கை அண்ணா பல்கலைக்கழகம்
நடத்தி வருகிறது. அதைப்போல்
இந்தாண்டு பொறியியல் கவுன்சிலிங்,
சென்னையில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில்
தொடங்கியது.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டுப்
பிரிவினருக்கான கவுன்சிலிங்
நடைபெற்று முடிந்தது. இந்நிலையில்தான்,
அதிகரிக்கப்பட்ட பொறியியல் இடங்கள்
தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானது.
இதையடுத்து, ஜுன் 27ம் தேதி முதல்
தொடங்குவதாக திட்டமிடப்பட்ட
பொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங்,
தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது, பொதுப்பிரிவு கவுன்சிலிங், ஜுலை 7ம்
தேதி முதல் தொடங்கும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்
தொழிற்பிரிவு கலந்தாய்வு, ஜுலை 9ம்
தேதி தொடங்குகிறது.
எந்தெந்த கட்-ஆப் மதிப்பெண்ணிற்கு, எந்த நாளில்
கவுன்சிலிங் நடைபெறும் என்ற விபரம்,
விண்ணப்பித்த மாணவர்களுக்கு SMS மூலம் தகவல்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜுலை 7ம் தேதி துவங்கும் கவுன்சிலிங், ஆகஸ்ட்
4ம் தேதி வரை நடைபெறும் மற்றும் காலை 7
மணிமுதல் மாலை 7 மணிவரை கவுன்சிலிங்
தொடர்ந்து நடைபெறும்
என்று அண்ணா பல்கலை அதிகாரப்பூர்வமாக
தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அனைத்து விபரங்களையும்
தெரிந்துகொள்ள www.annauniv.edu என்ற வலைதளம்
செல்லவும்.

No comments:

Post a Comment