Monday, July 07, 2014

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் நாளை (ஜூலை 8) வெளியிடப்பட உள்ளது

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள்
இணையதளத்தில் நாளை(ஜூலை 8) வெளியிடப்பட உள்ளன.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம்
வெளியிட்ட அறிவிப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
வெளியிட்ட பிறகு மறுகூட்டல் கோரியவர்களின்
விடைத்தாள்கள் மறுகூட்டல் செய்யப்பட்டன. இதில்
மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல்
students.sslc14rt.in என்ற இணையதளத்தில்
செவ்வாய்க்கிழமை காலை 8
மணிக்கு வெளியிடப்படும்.இந்தப் பட்டியலில்
இல்லாத மாணவர்களின் விடைத்தாள்களில் எந்தவித
மதிப்பெண் மாற்றமும் இல்லை என
தெரிவிக்கப்படுகிறது.மதிப்பெண்களில் மாற்றம்
உள்ள ஜூலை 9 முதல் 11 வரை தங்கள் மாவட்டத்தில்
உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
அலுவலகத்தில் பழைய மதிப்பெண்
சான்றிதழை ஒப்படைத்துவிட்டு புதிய மதிப்பெண்
சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment