Friday, August 08, 2014

தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நிரப்ப புதியதாக தெரிவு செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு வருகிற 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை பயிற்சி நடைபெறவுள்ளது

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில்
காலியாக உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் / மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த
பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு செய்து அதற்கான
ஆணை பிறப்பித்துள்ளது.

இதையடுத்து புதியதாக மாவட்டக்
கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வருகிற
11ம் தேதி முதல் 22ம்
தேதி வரை பயிற்சி நடைபெற உள்ளதெனவும்,
பயிற்சியின் இறுதியில் அவர்களுக்கான
பணி ஓதுக்கீடு ஆணை வழங்கப்படும் எனவும் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முழு விவரம் விரைவில் வெளியாகும்.

No comments:

Post a Comment