Saturday, August 23, 2014

எட்டாம் வகுப்பு தனித் தேர்வு செப்.25-இல் தொடக்கம்

தனித் தேர்வர்களாக எழுதும் மாணவர்களுக்கான எட்டாம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கும் என, சென்னையிலுள்ள அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது.செப்டம்பர் 25-ஆம் தேதி தமிழ், 26-ஆம் தேதி ஆங்கிலம், 27-ஆம் தேதி கணிதம், 29-ஆம் தேதி அறிவியல், 30-ஆம் தேதி சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்குத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment