Wednesday, August 13, 2014

பிளஸ் 2 தனித்தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு சிறப்பு மையங்களில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு ஆன்-லைன் மூலம்
விண்ணப்பிப்பதற்காக கல்வி மாவட்டம் தோறும்
சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த
மையங்களில் விண்ணப்பங்களைப்
பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 14
என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாணவர் நலன் கருதி ஆகஸ்ட் 19-
ஆம் தேதி வரை கால அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் ஆகஸ்ட் 15, 16, 17
தேதிகள் விடுமுறை தினம் எனவும் அரசுத் தேர்வுகள்
இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த
சிறப்பு மையங்களின்
விவரத்தை அறிந்துகொள்ள www.tndge.in
என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

No comments:

Post a Comment