Saturday, August 23, 2014

ஆசிரியை மீது தாக்குதல் நிர்வாகி உள்பட 6 பேர் மீது கொலை முயற்சி வழக்குஆசிரியை மீது தாக்குதல் நிர்வாகி உள்பட 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கு

திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த ராஜா மனைவி தாரணி (32). இவர் துவாக்குடி அடுத்த தேவராயனேரி நரிக்குறவர் காலனியில் உள்ள திருவள்ளுவர் குருகுல மானிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பள்ளியை அதே பகுதியைச் சேர்ந்த தொண்டு நிறுவன உரிமையாளர் மகேந்திரன் என்பவர் நிர்வகித்து வருகிறார்.ஆசிரியர்கள் நியமனத்தில் லட்சக்கணக்கில் பணம் பெறப்படுவதாகவும், பள்ளிக்கு வரும் மதிய உணவுப் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் சென்றது. இம்மனுவை தாரணிதான் அனுப்பியதாக சந்தேகித்த மகேந்திரன் தனது உறவினர்களுடன் பள்ளிக்குச் சென்று அங்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த தாரணியை சரமாரியாகத் தாக்கி செல்போன், ரொக்கம் ஆகியவற்றை பறித்தார். மேலும், அவரை தனியறையில் வைத்து பூட்டி சித்ரவதை செய்துள்ளார். தகவலறிந்த தொடக்கக் கல்வி அலுவலர் ஆரோக்கிய மேரி பள்ளிக்கு விரைந்து வந்து ஆசிரியையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார், மகேந்திரன் அவரது மனைவி சீதா, உறவினர்கள் உதயா, அருண், அருள்மேரி, கவிதா உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவில் வழக்குப் பதிந்து தலைமறைவான அவர்களைத் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment