Thursday, August 28, 2014

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை ( ஆக.28) வழங்குகிறார்

தொடக்கக் கல்வித் துறைக்காக 1,649
இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான
தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம்
வெளியிட்டது.அதேபோல், முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஆங்கிலம்,
கணிதம், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில்
1,236
பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
இடைநிலை ஆசிரியர்கள்,
பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து 7
பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர்
ஜெயலலிதா வியாழக்கிழமை (ஆக.28)
வழங்குகிறார்.
இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள்,
இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்கள் என 15 ஆயிரத்துக்கும்
அதிகமானோர் புதிதாக
நியமிக்கப்படுகின்றனர். முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்களில்
இரண்டு பாடங்களுக்கான ஆசிரியர்கள்,
இடைநிலை ஆசிரியர்களில் சில
துறைகளுக்கான ஆசிரியர்கள் தவிர 13
ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள்
தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வைத்
தொடங்கி வைக்கும் வகையில்,
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில் 7 பேருக்கான
பணி நியமன ஆணையை முதல்வர்
ஜெயலலிதா நேரில் வழங்குகிறார்.
இப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
பட்டதாரி ஆசிரியர்கள்,
இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான
கலந்தாய்வு பெரும்பாலும் அடுத்த வாரத்தில்
இருக்கும் எனத் தெரிகிறது. இந்தப்
பணி நியமனக் கலந்தாய்வு தேதிகள்
ஓரிரு நாளில் இறுதிசெய்யப்படும் என
தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
இடைநிலை ஆசிரியர்கள்,
பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து 7
பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர்
ஜெயலலிதா வியாழக்கிழமை (ஆக.28)
வழங்கி பணி நியமனக் கலந்தாய்வைத்
தொடங்கி வைக்கிறார்.கலந்தாய்வு தேதி விவர
ம் விரைவில் அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment