Friday, August 01, 2014

பள்ளிகள் தரம் உயரும் அறிவிப்பு முதல்வருக்கு ஆசிரியI ர் சங்கம் நன்றி!

தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பள்ளிக்கல்வி துறைக்கு நடப்பு கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலை பள்ளிகள்,
மேல்நிலை பள்ளிகளாகவும், 50 அரசு நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாகவும், 42 தொடக்க பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும் நிலை உயர்த்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். புதிதாக 128 தொடக்கபள்ளிகள் துவங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.மொத்தம் 242 பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதாலும், 128 புதிய பள்ளிகள் தொடங்கப்படுவதாலும் இந்த ஆண்டு புதிய ஆசிரியர் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்படும். இதை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment