Saturday, September 27, 2014

பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு: கல்வித்துறை வழிகாட்டுதல்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின்
பாதுகாப்பினை உறுதி செய்ய
வேண்டும் என தமிழ்நாடு தொடக்க
கல்வி இயக்குனர், தொடக்க
கல்வி அலுவலர், கூடுதல் மற்றும்
உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன் விவரம்: அனைத்து வகுப்பறைகளுக்கும்
சென்று மாணவர்களின் கற்றல்
அடைவுத்திறன், வாசிப்பு, எழுதும் திறன்
ஆகியவற்றை மாணவர்களிடம்
கலந்துரையாடி அறிய வேண்டும்.
மாணவர்களின் வருகை பதிவேட்டில், நீண்ட
நாள் பள்ளிக்கு வராதவர்களின்
பட்டியலை எடுத்து, அதற்கான
காரணத்தை மாணவர்களிடமே கேட்டறிந்து,
அவர்களை பள்ளிக்கு வரவழைக்க ஆசிரியர்
உதவியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளின் கட்டமைப்பு, கழிப்பறை, குடிநீர்
வசதி போன்றவை சார்ந்த பள்ளியின் தளவாட
பொருட்கள், 'டிவி'மற்றும் நுாலக
பயன்பாடு சார்ந்தும் ஆய்வு செய்ய வேண்டும்.
என்பது உட்பட
பல்வேறு வழிகாட்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment