Wednesday, October 08, 2014

7 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு, பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

தமிழக முதல்-அமைச்சருக்கு,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின்
மாநிலத்தலைவர் கு.பால்பாண்டியன்
நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில்
கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள்
தற்போது 100 சதவீத
அகவிலைப்படியை பெற்று
வருகிறார்கள். கடந்த 1-ந் தேதி முதல் 7
சதவீத அகவிலைப்படி உயர்வினை மத்திய
அரசு அறிவித்து, உயர்த்தப்பட்ட
அகவிலைப்படியை மத்திய
அரசு பணியாளர்கள்
பெற்று வருகிறார்கள். ஆனால் மத்திய
அரசுக்கு இணையாக, உயர்த்தப்பட்ட 7
சதவீத
அகவிலைப்படியானது வழங்கப்படாமல்
நிலுவையில் இருந்து வருகிறது.
எனவே வரவுள்ள தீபாவளி உள்ளிட்ட
பண்டிகை கால
செலவுகளை எதிர்கொள்ளும்
வகையில் நிலுவையாக உள்ள 7 சதவீத
அகவிலைப்படியை கடந்த 1-ந்
தேதி முதல் கணக்கிட்டு வழங்கிட உரிய
உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment