Friday, October 10, 2014

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7%
அகவிலைப்படி உயர்வு வழங்க தமிழக
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்
உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அரசு ஊழியர்களுக்கான
அகவிலைப் படியை 1.7.2014 முதல்
அவர்களுடைய அடிப்படை ஊதியம்
மற்றும் தர ஊதியத்தில்
ஏழு விழுக்காடு, அதாவது 100
விழுக்காடிலிருந்து 107 விழுக்காடாக
உயர்த்தி மத்திய
அரசு வழங்கியுள்ளது போல்,
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கான அகவிலைப்
படியையும்,
அவர்களது அடிப்படை ஊதியம் மற்றும் தர
ஊதியத்தில் ஏழு விழுக்காடு உயர்த்திட
முடிவு செய்துள்ளது தமிழக அரசு.
இந்த அகவிலைப்
படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள்
மற்றும் அரசு மானியம் பெறும்
கல்வி நிறுவனங்களில் பணிபுரியும்
அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த்
துறையில் பணிபுரியும் கிராம
உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும்
சத்துணவு ஊழியர்கள்,
ஊராட்சி உதவியாளர், எழுத்தர்,
ஓய்வூதியம் மற்றும் குடும்ப
ஓய்வூதியம் பெறுவோர் மற்றும்
வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும்
அனைவருக்கும் பொருந்தும்.
இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,
ஓய்வூதியம் மற்றும் குடும்ப
ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 18
லட்சம் பேர் பயனடைவார்கள். இந்த
அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி 1.7.2014
முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக
வழங்கப்படும்.
இந்த அகவிலைப் படி உயர்வு மூலம்
அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,558
கோடியே 97 லட்சம் ரூபாய்
செலவு ஏற்படும் என்பதைத்
தெரிவித்துக் கொள்கிறேன்
என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment