Saturday, November 08, 2014

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜன., 10ம் தேதி போட்டி எழுத்து தேர்வு

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான
போட்டி எழுத்துத் தேர்வு வரும் ஜன., 10ம்
தேதி நடக்கிறது.
சி.இ.ஓ., மார்ஸ் விடுத்துள்ள
செய்திக்குறிப்பு: கடந்த 2013-14 மற்றும்
2014-15ம் ஆண்டிற்கான
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான
போட்டி எழுத்துத் தேர்வு வரும் 10.1.2015
அன்று, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்
நடக்கிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு
வந்துள்ளன.
வரும் 10ம் தேதி காலை 10:00 மணி முதல்
வரும் 26ம் தேதி மாலை 5:00 மணி வரை,
சி.இ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பங்கள்
ரூ.50க்கு விற்கப்படும். பூர்த்தி செய்த
விண்ணப்பங்களை வரும் 26ம்
தேதி மாலை 5:00 மணிவரை சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு சி.இ.ஓ., மார்ஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment