Tuesday, November 11, 2014

சிறுபான்மை மொழிப் பாட ஆசிரியர்களுக்கு நவம்பர் 13- இல் கலந்தாய்வு

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும்
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள சிறுபான்மை மொழிப் பாட
ஆசிரியர்களுக்கான பணி நியமன
கலந்தாய்வு வியாழக்கிழமை (நவ.13) நடைபெற உள்ளது.
இணையதளம் மூலம் அந்தந்த மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில்
பணி நியமனக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
தெலுங்கு, மலையாளம், கன்னடம்,
உருது ஆகிய மொழிப்பாட ஆசிரியர்களுக்கும்,
இந்த மொழிகளில் கற்பிக்கப்படும் கணிதம்,
அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான
ஆசிரியர்களுக்கும்
கலந்தாய்வு நடைபெறுகிறது.
இந்தக் கலந்தாய்வின் போது ஆசிரியர்
தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட தேர்வுக்
கடிதமும், கல்விச் சான்றிதழ்களையும்
தவறால் எடுத்துவர வேண்டும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment