Saturday, November 08, 2014

பிளஸ் 2 தனித்தேர்வுஅறிவிப்பு வெளியீடு!

வரும் மார்ச்சில் நடக்கும் பிளஸ் 2 பொதுத்
தேர்வை, தனித் தேர்வாக எழுத விரும்பும்
தனித் தேர்வர்கள், வரும், 10ம் தேதி முதல், 21ம் தேதி வரை, இணைய தளம் வழியாக
விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அதன் விவரம்: தனித் தேர்வர்கள்,
தேர்வுக்கு பதிவு செய்ய வசதியாக,
கல்வி மாவட்ட வாரியாக, சேவை மையங்களை,
தேர்வுத் துறை அமைத்துள்ளது. இதன்
விவரங்களை, www.tndge.in என்ற
இணையதளத்தில் பார்க்கலாம். வரும், 10ம்
தேதி முதல், 21ம் தேதி மாலை, 5:00
மணி வரை, சேவை மையங்களுக்கு, நேரில்
சென்று மாணவர்கள்,
தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள
வேண்டும்.இவ்வாறு,
தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment