Wednesday, November 12, 2014

பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 7-இல் கணிதத் திறன் போட்டி

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப
மையத்தின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கணிதத் திறன்
போட்டி டிசம்பர் 7-ஆம் தேதி
நடைபெறுகிறது.
இதுகுறித்து
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப
மையம் திங்கள்கிழமை வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
இந்தப் போட்டியில் 5 முதல் 8-ஆம்
வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்
பங்கேற்கலாம். டிசம்பர் 7-ஆம் தேதி
கோட்டூர்புரத்தில் உள்ள பெரியர்
தொழில் நுட்ப மையத்தில் காலை 11
மணிக்கு தேர்வு நடைபெறும்.
தேர்வில் பங்கேற்க விரும்பும்
மாணவர்கள் நவம்பர் 29-ஆம் தேதிக்குள்
பெயர்களை பதிவு செய்து கொள்ள
வேண்டும். மேலும் விவரங்களுக்கு
044-24410025 என்ற தொலைப்பேசியில்
தொடர்பு கொள்ளலாம் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment