Monday, November 24, 2014

மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்க உத்தரவு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில்,
மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு,
சிறப்பு கையேடு வழங்கி பயிற்சி
அளிக்க தலைமையாசிரியர்களுக்கு,
பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அடுத்தாண்டு மார்ச், ஏப்ரலில் நடக்கும்,
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
பொதுத்தேர்வில், பள்ளிகள், 100 சதவீதம்
தேர்ச்சி பெறும் வகையில், பல
நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இவ்வகுப்புகளில்
காலாண்டு தேர்வில்,
தேர்ச்சி பெறாதவர்கள் (மெல்ல கற்கும்
மாணவர்கள்) கண்டறியப்பட்டு, அனுபவம்
வாய்ந்த ஆசிரியர்கள் மூலம்
பாடவாரியாக கற்பிக்க,
சிறப்பு கையேடு
தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில்,இந்த
கையேடுகள்
மாணவர்களுக்கு வழங்கப்பட்டு பயிற்சி
அளிக்கப்படும்.
மாவட்ட கல்வித்துறை வட்டாரங்கள்
கூறியதாவது:மாவட்ட முதன்மைக்
கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில்
தயாரிக்கப்பட்ட இந்த சிறப்பு கையேட்டில்
முக்கிய வினாக்கள், அதற்கான விடைகள்
இடம் பெற்றுள்ளன. அரசு மற்றும
உதவிபெறும் பள்ளிகளின்
தலைமையாசிரியர்கள் மூலம் மெல்ல
கற்கும் மாணவர்களிடம்
இவை வழங்கப்படும். இதைப் படித்தால்,
அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வில்
தேர்ச்சி பெறுவதோடு, அதிக
மதிப்பெண்களும் பெறலாம்.இவ்வாறு,
அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

No comments:

Post a Comment