Monday, November 10, 2014

PGTRB : முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத்தேர்வுக்கான விண்ணப்பங்கள்
திங்கள்கிழமை (நவம்பர்10) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ஆசிரியர்
தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப்
பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-
ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
அலுவலகங்களில் நவம்பர் 10 முதல் 26-ஆம்
தேதி வரை விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சென்னையில் : சென்னை மாவட்டத்தில்
இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள்
சென்னை நந்தனத்தில் உள்ள அரசு மேல்நிலைப்
பள்ளியில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் 26-ஆம்
தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.30
மணி வரை விநியோகிக்கப்படும் என
சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
அனிதா தெரிவித்தார். விண்ணப்பத்தின்
விலை ரூ.50 ஆகும்.

No comments:

Post a Comment