Friday, December 05, 2014

885 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கம் சார்பில்
885 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி
ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்க
கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில்
வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் 500 ஆசிரியர்
பயிற்றுநர்களை பட்டதாரி
ஆசிரியர்களாக
பணி மூப்பு அடிப்படையில்
பணி மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் கடந்தாண்டும் அதற்கு முந்தைய
ஆண்டு பயிற்றுநர்களில்
பாதியளவு மாற்றம் செய்யவில்லை.
இதை எதிர்த்து வழக்கு தாக்கல்
செய்யப்பட்டது. அவ்வழக்கில் புதிய
ஆசிரியர்
நியமனத்திற்கு தடை விதிக்கவும்,
தங்களுக்கு பணி மாறுதல் வழங்கவும்  கோரப்பட்டது. அவ்வழக்கின்
தீர்ப்பு நேற்று(04.12.2014) வழங்கப்பட்டது.
அதில் 885 ஆசிரியர் பயிற்றுநர்களை 15
நாட்களுக்கு பள்ளிகளுக்கு மாற்றம்
செய்ய வேண்டும் என
பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் மாநில
திட்ட இயக்குனர் அவர்களுக்கும்
மதுரை உயர்நீதிமன்ற
கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment