Friday, January 16, 2015

டி.இ.டி., தேறியவர்களுக்கு 19ம் தேதி முதல் சான்றிதழ் வினியோகம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின்
சார்பில், 2012-13ல் நடந்த தகுதி தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ், வரும் 19ம் தேதி முதல் முதன்மை கல்வி அலுவலகத்தில் வினியோகம் செய்யப்படுகிறது.

இத்தேர்வில்,
தேர்ச்சி பெற்றவர்களின்
சான்றிதழ், ஆசிரியர் தேர்வு வாரிய
இணையதளத்தில், பதிவேற்றம்
செய்யப்பட்டது. தேர்வர்கள்
பதிவிறக்கம் செய்துகொள்ள
அறிவுறுத்தப்பட்டனர். இதில்
பெரும்பாலான தேர்வர்கள்
சான்றிதழ்களை பதிவிறக்கம்
செய்துகொண்டனர். சரியான
முறையில் பதிவிறக்கம்
செய்துகொள்ளாத ஆசிரியர்களின்
தகுதி சான்றிதழ், மாவட்ட
முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 2012-13
கல்வியாண்டில் 150க்கு 90
மதிப்பெண்களுக்கு மேல்
எடுத்து தேர்ச்சி பெற்று,
இணையதளம் மூலம் சான்றிதழ்
பதிவிறக்கம் செய்யாத தேர்வர்கள்,
உரிய ஆதாரத்தினை காண்பித்து,
வரும் 19ம் தேதி முதல் பிப்., 14ம்
தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment