Sunday, January 18, 2015

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி தொடங்க திட்டமிடல்

பிளஸ் 2 செய்முறை தேர்வுகளுக்காக
சென்னையில் 300 மையங்கள் அமைக்க தேர்வு துறை முடிவு செய்துள்ளது . 

பிளஸ் 2
வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச்
மாதம் முதல் வாரத்தில்
தொடங்குகிறது. முன்னதாக,
அறிவியல்
பாடப்பிரிவில் படிக்கும்
மாணவர்களுக்கு பிப்ரவரி 5
அல்லது 6 ம் தேதிகளில்
செய்முறை தேர்வுகளை தொடங்க
தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னையில் மொத்தம் உள்ள 406
மேல்நிலை பள்ளிகளில் அறிவியல்
பாடப்பிரிவில் படிக்கும் 50 ஆயிரம்
மாணவ & மாணவியர்
செய்முறை தேர்வில்
பங்கேற்பார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களுக்காக சென்னையில் 300
தேர்வு மையங்கள் அமைக்கப்பட
உள்ளன. செய்முறை தேர்வில் 30
மதிப்பெண்கள்
புறமதிப்பீட்டுக்கும், 20
மதிப்பெண்கள்
அகமதிப்பீட்டுக்கு தரப்பட்டுள்ளன .
இரண்டிலும் சேர்த்து 40
மதிப்பெண்கள் எடுத்தால்தான்
செய்முறை தேர்வில் மாணவ
மாணவியர் தேர்ச்சி பெற முடியும் .
அதாவது செய்முறை தேர்வில் 80
சதவீத மதிப்பெண்
பெறவில்லை என்றால் தேர்ச்சிபெற
முடியாது . திருவள்ளூர் ,
காஞ்சிபுரம் மாவட்டங்களில் இந்த
ஆண்டு 35 ஆயிரம் மாணவ மாணவியர்
செய்முறைத் தேர்வில் பங்கேற்க
உள்ளனர் . பிப்ரவரி 28 ம் தேதிக்குள்
செய்முறைத்
தேர்வுகளை நடத்தி முடித்து அதில்
மாணவர்கள் பெற்ற
அகமதிப்பெண்களை மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்கள்
தேர்வுத்துறைக்கு அனுப்பி
வைக்க வேண்டும் . இதையடுத்து ,
சென்னை மாவட்டத்தில் இந்த
ஆண்டு பிளஸ் 2 தேர்வில் சுமார் 1
லட்சத்து 50 ஆயிரம் மாணவ
மாணவியர் பங்கேற்க உள்ளனர் .
அறிவியல்
பாடங்களை எடுத்து படிக்கும் 54
ஆயிரம் மாணவர்கள் செய்முறைத்
தேர்வு எழுதுவார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது .
சென்னை மாவட்ட
மாணவர்களுக்கான செய்முறைத்
தேர்வுகள் பிப்ரவரி 5 ம்
தேதி தொடங்கி 22 ம்
தேதி வரை நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment