Sunday, January 04, 2015

மதன்மோகன் மாளவியா பெயரில் புதிய திட்டம்: ஆசிரியர்களை உருவாக்க மத்திய அரசு துவக்கியது

பள்ளி, கல்லூரிகளுக்கு தேவைப்படும்
திறன் மிகுந்த ஆசிரியர்களை உருவாக்க, மதன் மோகன் மாளவியா தேசிய ஆசிரியர்கள், கற்பித்தல் திட்டத்தை மத்திய அரசு துவக்கி உள்ளது.

இத்திட்டத்திற்கு, 12வது ஐந்தாண்டு திட்டத்தில்,
900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஆசிரியர்கள்: பள்ளி,
கல்லூரி வகுப்பறையில் அவர்கள்
பணியாற்றும் சூழல்;
பணி மேம்பாடு ஆகியவற்றை,
இத்திட்டம் கண்காணிக்கும்.
பாடத்திட்டத்தை உருவாக்குதல்:
மதிப்பிடுதல்,
திறனாய்வு முறைகளை,
வரையறுத்தல்; ஆசிரியர்
பணி குறித்த
ஆய்வு உள்ளிட்டவை இத்திட்டத்தின்
முக்கிய நோக்கம்.
கல்லூரி, பள்ளிகளில் ஆசிரியர்
பற்றாக்குறையை கண்டறிந்து, திறன்
வாய்ந்த
ஆசிரியர்களை உருவாக்கி அளித்தல்
, பணியில் இருக்கும்
ஆசிரியர்களின் திறன்
மேம்பாட்டிற்கான
பயிற்சி வழங்குதல்
உள்ளிட்டவையும் இத்திட்டத்தில்
அடங்கும். இத்திட்டத்திற்காக, 30
மத்திய பல்கலைகளில்,
பள்ளி கல்விக்கான மையங்கள்;
பாடத்திட்டம், ஆசிரியர்
பணி தொடர்பான, 50 மையங்கள்;
ஆசிரியர் கல்விக்கான,
இரண்டு பல்கலை மையங்கள்
உள்ளிட்ட பல்வேறு மையங்கள்
உருவாக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment