Sunday, January 18, 2015

தமிழக கிராமப்புற பள்ளி மாணவர்களிடம் வாசிப்புத்திறன் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

தமிழக கிராமப்புற பள்ளி மாணவர்களிடம், தமிழ், ஆங்கிலம் வாசிக்கும் திறன்
அதிகரித்துள்ளதாக, தனியார் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பிரதம் என்ற தன்னார்வ
தொண்டு நிறுவனம், 2006 முதல்
கிராமங்களில் உள்ள குழந்தைகள்
பள்ளிக்கு செல்லுதல்; அவர்கள்
கற்றல் திறன்
குறித்து ஆய்வுசெய்து, ஏசர் என்ற
தலைப்பில் வெளியிடுகிறது. இந்த
ஆண்டு, நாடு முழுவதும், 577
மாவட்டங்கள்; 16,497 கிராமங்களில்,
மூன்று முதல், 16 வயதுக்குட்பட்ட,
5,70 லட்சம் குழந்தைகளிடம்
ஆய்வு நடந்தது.
நாடு முழுவதும் கட்டாய கல்விச்
சட்டம் அறிமுகமாகி உள்ள
நிலையில், ஏசர் குழு, 15,206 அரசுப்
பள்ளிகளையும் ஆய்வில்
சேர்த்துக் கொண்டது. தமிழகத்தில்
29 மாவட்டங்கள்; 823 கிராமங்கள்; 17,335
வீடுகள்; 3571, 3 - 5 வயதில் 3571; 6 - 14
வயதில்,13, 948; 15 - 16 வயதுடைய 2,674
குழந்தைகளிடம்
ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வு முடிவுகள்;
* 6 - 14 வயதில், பள்ளி சேராத
குழந்தைகள் எண்ணிக்கை 2013
ஆண்டை விட, 2014ல்
சற்று அதிகரித்துள்ளது.
இருப்பினும், தேசிய அளவை விட மிக
குறைவாக உள்ளது.
* 6 - 14 வயதில், தனியார் பள்ளிகளில்
சேர்ந்த குழந்தைகள் எண்ணிக்கை,
ஆண்டுதோறும் அதிகரித்துள்ளது.
2014ல், 31.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது, தேசிய அளவான 30.8 சதவீதம்
என்பதைவிட அதிகம்.
* மூன்றாம் வகுப்பு மாணவர்களில்,
முதல் வகுப்பு தமிழ்
பாடத்தை வாசிக்கும் திறன்
பெற்றவர்கள் எண்ணிக்கை, 2013ல், 29
சதவீதம்; 2014ல், 37.9 சதவீதமாக
அதிகரித்துள்ளது.
* ஐந்தாம் வகுப்பு மாணவர்களில்,
இரண்டாம் வகுப்பு தமிழ்
பாடத்தை வாசிக்கும் திறன்
பெற்றவர்கள் எண்ணிக்கை 2013ல், 31.9
சதவீதம்; 2014ல், 46.9 சதவீதமாக
அதிகரித்து உள்ளது.
* கணித பாடத்தை படிக்கும்
மாணவர்கள் எண்ணிக்கையும்
கணிசமாக உயர்ந்துள்ளது.
* ஐந்தாம் வகுப்பு மாணவர்களின்,
ஆங்கில வார்த்தைகளை வாசிக்கும்
திறன், 2013ல், 57.7 சதவீதம்; 2014ல், 65.8
சதவீதமாக அதிகரித்துள்ளது. இது,
தேசிய அளவான 49.2 சதவீதத்தை விட
அதிகம்.
* மூன்றாம் வகுப்பு மாணவர்களின்
ஆங்கில வார்த்தைகள்
வாசிப்பு திறனும்
அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment