Sunday, February 08, 2015

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி பிப்.16 முதல் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

1807 முதுகலை ஆசிரியர்
பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 10ம் தேதி நடைபெற்றது.

இத்தேர்விற்கு 2,02,231 நபர்கள்
விண்ணபித்திருந்தனர். அதில் 1,90,922
நபர்கள் எழுத்துத் தேர்வு எழுதினர்.
இதையடுத்து 22.01.2015
அன்று அனைத்து பாடங்களுக்கு
விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு,
ஆட்சேபனை இருந்தால் 29.01.2015க்குள்
ஆசிரியர் தேர்வு வாரியத்திடம்
முறையிட கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து இன்று மாலை தேர்ச்சி
பட்டியல் வெளியிடப்பட்டு 1:1 என்ற
முறையில் சான்றிதழ்
சரிப்பார்ப்பிற்கு அழைக்கப்படவுள்ளது.
சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு இம்மாதம்
16ஆம் தேதி முதல்
மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. சான்றிதழ்
சரிப்பார்ப்புக்கான இடம் மற்றும்
அழைப்பு கடிதம் ஆசிரியர்
தேர்வு வாரிய இணையதளத்தில்
விரைவில்
வெளியிடப்படவுள்ளது. தற்காலிக
தேர்ந்தோர் பட்டியலில் மொத்தம் 1946
நபர்களின் பெயர் பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment