Saturday, February 28, 2015

மத்திய பட்ஜெட்- 2015 பார்வை

-மாத ஊதியம் பெறுவோருக்கான பயண அலவன்ஸ் உச்சவரம்பு ரூ. 800ல் இருந்து ரூ. 1,600 ஆக அதகரிப்பு


-மருத்துவ காப்பீட்டு பிரீமியத்துக்கான
வரி விலக்கு ரூ. 15,000ல் இருந்து 25,000 ஆக
அதிகரிப்பு
-தூய்மை இந்தியா திட்டத்துக்கு நிதி வழங்கும்
நிறுவனங்களுக்கு முழு வரிவிலக்கு
-சேவை வரி 12.34%-ல் இருந்து 14% ஆக
அதிகரிப்பு
-செல்வந்த
வரி விதிப்பு முறை கைவிடப்படுகிறது
-ஆண்டு வருமானம் ரூ1 கோடிக்கு அதிகம்
பெறுவோர் 2% வரி செலுத்த வேண்டும்
-மாத ஊதியம் வாங்குவோரின் வருமான வரியில்
மாற்றம் இல்லை
-ரூ1 லட்சத்துக்கும் அதிகமான
பணபரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயம்
-மொத்த வரி வருவாய் ரூ. 14.49 லட்சம் கோடியாக
இருக்கும்
-இந்த ஆண்டு மொத்த செலவு ரூ. 17.77 லட்சம்
கோடியாக இருக்கும்
-திட்டச் செலவுகள் ரூ. 4.65 லட்சம் கோடி, திட்டம்
சாரா செலவுகள் ரூ. 13.12 லட்சம் கோடி
-ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் பினாமிகள்
பெயரில் சொத்துகள் வாங்கி குவிப்பதைத் தடுக்க
சட்டம்
-வெளிநாட்டு முதலீடு,
வங்கி முதலீடுகளை ஆண்டுதோறும் மத்திய
அரசுக்கு தெரிவிக்க வேண்டும்
-வருமான வரி கணக்கு தாக்கல்
செய்யும்போது இதை அவசியம் செய்ய வேண்டும்
-கருப்பு பணம் பதுக்கினால் 10 ஆண்டு சிறை
-கருப்பு பணம் பதுக்கலை தடுக்க வரி விதிப்பில்
திருத்தம்
-வெளிநாட்டு சொத்துகளை மறைத்தால் 7 ஆண்டுகள்
சிறை
-வெளிநாட்டு முதலீடுகளை கணக்கில்
காட்டாவிட்டால் கடும் நடவடிக்கை
-வெளிநாட்டில் கருப்புப்
பணத்தை மறைத்து வைத்தால் 10 ஆண்டு சிறை
-வெளிநாட்டில் பதுக்கிய நிதியைப் போல் 300
சதவீதம் அபராதம்
-இதற்காக புதிய சட்டத் திருத்தம்
கொண்டு வரப்படும்
-தனிநபர் வருமான வரி விலக்கு சலுகை தொடரும்:
அருண் ஜேட்லி
-கார்ப்பரேட் வரிக் குறைப்பு அடுத்த ஆண்டு முதல்
அமலாகும்
-பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 25 சதவீதம்
அதிகரிப்பு
-வர்த்தக நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 30
சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பு
-கார்பரேட் வரி குறைப்பு 4 ஆண்டுகள் அமலில்
இருக்கும்
-பாதுகாப்புத் துறைக்கு ரூ2,46,727
கோடி ஒதுக்கீடு
-கல்வி, மதிய உணவிற்கு ரூ. 68,968 கோடி நிதி
-சுற்றுச் சூழலை பாதிக்காத மின்சார கார்கள்
உற்பத்திக்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு
-பீகார், மேற்கு வங்கத்துக்கு சிறப்பு நிதி உதவி
வழங்கப்படும்: அருண் ஜேட்லி
-முதுகுவலி பிரச்சினை: பட்ஜெட்
உரையை அமர்ந்து வாசித்தார் அருண் ஜெட்லி
-தமிழகம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல்,
அஸ்ஸாமில் எய்ம்எஸ் மருத்துவமனைகள்
-டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகள்
பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்
-பட்ஜெட் உரையை அமர்ந்து வாசிக்கிறார்
நிதியமைச்சர்அருண் ஜெட்லி
-சபாநாயகர் சுமித்ரா மகாஜனின்
கோரிக்கையை ஏற்றார்
-தேவையெனில் அமர்ந்தே பட்ஜெட் படியுங்கள் :
சுமித்ரா மகாஜன்
-கடந்தமுறை பட்ஜெட் உரை வாசிக்கும்
போது சிறிது ஓய்வு எடுத்தார் ஜெட்லி
-இந்திய தங்க நாணயங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
இதன்மூலம் நாணய இறக்குமதி குறையும்
-அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள்
வெளியிடப்படும்
-தங்க பத்திரத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
இதன்மூலம் தங்கத்தை அடகு வைப்பது குறையும்
-மின்சார கார்கள் உற்பத்திக்கு ரூ75
கோடி ஒதுக்கீடு
-நிர்பயா திட்டத்துக்கு கூடுதலாக ரூஆயிரம்
கோடி ஒதுக்கீடு
-150 நாடுகளைச் சேர்ந்தோர்
இந்தியாவுக்கு வந்து விசா பெற்றுக் கொள்ள
அனுமதி
- இப்போது 43 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கே இந்த
வசதி உள்ளது
-100 நாள் ஊரக வேலை திட்டத்திற்கு 34,699
கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
-அசோகச் சக்கரம் பொறித்த தங்க நாணயம்
வெளியிடப்படும்
-தங்க பத்திரத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்
-கூடங்குளம் 2வது அணு உலையானது 2015-16ஆம்
ஆண்டு செயல்படத் தொடங்கும்: அருண் ஜேட்லி
-தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ6
ஆயிரம் கோடி ஒதுக்கீடு
-நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.
340 பில்லியனாக உள்ளது
-புதிய சாப்ட்வேர் நிறுவனங்கள் தொடங்க ரூ. 1,000
கோடி நிதி
-சுயதொழில் தொடங்குவோருக்கு உதவ ரூ. 1,000
கோடி
-4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுடைய 5
பெரும் மின் திட்டங்கள்
-ரயில்வே, சாலை திட்டங்களுக்கு நிதி திரட்ட
வரியில்லா பத்திரங்கள்
-பள்ளிகளில் டி.சி பெறாமல் வெளியேறும்
சிறுபான்மையினர் இன இளைஞர்கள்
வேலைவாய்ப்பு பெற புதிய சான்றிதழ் அறிமுகம்
-உள்கட்டமைப்பு வசதிக்கு ரூ70 ஆயிரம்
கோடி ஒதுக்கீடு
-சிறுபான்மை இளைஞர்களுக்கான
வேலைவாய்ப்புக்கு 'நயி மன்சில்' திட்டம்
-முதியோர் பென்சன் திட்டம் அடல்
பிகாரி வாஜ்பாய் பெயரில் அமலாகும்
-இதற்கான நிதி பிஎப் கணக்குகளில்
கேட்பாரற்று கிடக்கும் பணம் மூலம் பெறப்படும்
-உரிமை கோரா பி.பி.எப். தொகை ரூ3 ஆயிரம்
கோடி மற்றும் ஈ.பி.எப். தொகை ரூ6 ஆயிரம்
கோடி முதியோர் நலனுக்கு ஒதுக்கீடு
-நாடு முழுவதும் அனைவருக்கும் இன்சூரன்ஸ்
திட்டம் அமலாக்கப்படும்
-ஆண்டுக்கு ரூ. 12 செலுத்தினால் விபத்தில்
பலியானவருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்
-முதியோருக்கு பென்சன் வழங்கவும் திட்டம்.
இதற்கான பிரீமியத்தில் 50 சதவீதத்தை மத்திய
அரசு வழங்கும்
-தபால் நிலையங்களை வங்கிகளாக மாற்ற
நடவடிக்கை
-நாடு முழுவதும் அனைவருக்கும் இன்சூரன்ஸ்
திட்டம் அமலாக்கப்படும்
-ஆண்டுக்கு ரூ. 12 செலுத்தினால் விபத்தில்
பலியானவருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்
-முதியோருக்கு பென்சன் வழங்கவும் திட்டம்.
இதற்கான பிரீமியத்தில் 50 சதவீதத்தை மத்திய
அரசு வழங்கும் .

No comments:

Post a Comment