Tuesday, February 03, 2015

கல்வி அதிகாரிகளுடன் தேர்வுத் துறை இயக்குனர் ஆலோசனை

மதுரையில் ஐந்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
அரசு பொது தேர்வுகள்
குறித்து மதுரை, திண்டுக்கல்,
தேனி,ராமநாதபுரம், விருதுநகர்
மாவட்ட முதன்மைமற்றும்
கல்வி அலுவலர்கள்,தேர்வுத்துறை
அலுவலர்கள், அறைக்
கண்காணிப்பாளர்கள்,
தலைமையாசிரியர்கள், வினாத்தாள்
காப்பாளர்களுடன் ஆலோசனை நடந்தது.
தேர்வின்போது கடைபிடிக்க வேண்டிய
விதிமுறை குறித்து பயிற்சி
அளிக்கப்பட்டது. வினாத்தாள்
கொண்டு செல்லும் முறை,
இந்தாண்டு முதல் சில
பாடங்களுக்கு அமல்படுத்தப்பட்ட கோடிட்ட
விடைத்தாள் குறித்தும்
விளக்கமளிக்கப்பட்டது. இயக்குனர்
கூறுகையில், ''தேர்வு கையேட்டில்
உள்ள சில தவறுகள் தெரிவிக்கப்பட்டது.
விரைவில் அது குறித்து திருத்தம்
மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment