Friday, March 06, 2015

மார்ச் 11ம் தேதி முதல் பிளஸ் 1 ஆண்டு தேர்வை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

பிளஸ் 2 தேர்வு இல்லாத நாட்களில்,
மார்ச் 11ம் தேதி முதல், பிளஸ் 1
ஆண்டு தேர்வை நடத்த பள்ளிக்
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2வுக்கு தயார் ஆகும், பிளஸ் 1
மாணவர்களுக்கு தேர்வை விரைந்து
முடிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு இல்லாத நாட்களில்,
பிளஸ் 1 ஆண்டு தேர்வு மார்ச் 11ம்
தேதி துவங்க உள்ளது. தேர்வு விவரம்,

* 11ம் தேதி - தமிழ்
* 12, 13ம் தேதி - ஆங்கிலம்,
இரண்டு தாள்கள்.
* 20ம் தேதி - கணினி அறிவியல்,
மின்னணு சாதனங்கள்,
தொழிற்கல்வி உள்ளிட்ட பாடங்கள்.
* 24ம் தேதி - உயிரியல், தாவரவியல்,
வணிகவியல்.
* 25ம் தேதி, இயற்பியல், தட்டச்சு,
மனையியல் உள்ளிட்ட பாடங்கள்.
* 26ம் தேதி - விலங்கியல், கணிதம்,
வரலாறு, வணிகக் கணிதம் உள்ளிட்ட
பாடங்கள்.
* 30ம் தேதி - புவியியல், வேதியியல்,
கணக்குப் பதிவியல்,
ஆட்டோ மெக்கானிக் உள்ளிட்ட பாடங்கள்.
அனைத்து பள்ளிகளிலும், மார்ச் 31ம்
தேதிக்குள் தேர்வுகளை முடிக்க
வேண்டும். தங்கள் மாவட்ட வாரியாக,
தேர்வுக்கான பாடங்களை முதன்மைக்
கல்வி அலுவலர் மாற்றியமைத்துக்
கொள்ள, பள்ளிக்
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment