Monday, March 16, 2015

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே முதன்மை கண்காணிப்பாளர்கள்: கல்வித்துறை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு,
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே,
முதன்மை கண்காணிப்பாளர்களாக
நியமிக்கப்படுவர் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது; வரும் 19ல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளது.
இத்தேர்வை நடத்துவது குறித்து,
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான
கூட்டம், உடுமலையில் நடைபெற்றது.
கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:
பிளஸ் 1, பிளஸ் 2
தேர்வு நடப்பதால்,மேல்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர்கள் அப்பணியில்
ஈடுபட்டுள்ளனர்.இதனால், 10ம்
வகுப்பு பொதுத்தேர்வுக்கு,
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மட்டுமே முதன்மை கண்காணிப்பாளர்களாக
நியமிக்கப்படுவர்.பிளஸ் 2
தேர்வுக்கு இடையே, 10ம்
வகுப்பு தேர்வும் நடக்க உள்ளது.
எவ்விதகுழப்பத்துக்கும் இடமளிக்காத
வகையில், தேர்வு மையங்களில் 2
பொதுத்தேர்வுகளுக்கும்,
தனித்தனி கட்டுப்பாட்டு அறைகள்
அமைத்து பயன்படுத்த வேண்டும்.பிளஸ் 2
தேர்வை போன்றே, இத்தேர்வுக்கும்
பாதுகாப்பு ஏற்பாடுகளை பின்பற்ற
வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பத்தாம் வகுப்பு தேர்வுக்கான
கண்காணிப்பாளர், துறை அலுவலர் மற்றும்
முதன்மை கண்காணிப்பாளர்களின் பட்டியல்
வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment