Thursday, April 09, 2015

அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதி முடிவடைகிறது கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும்

அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந்
தேதியுடன் முடிவடைகின்றன.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந்
தேதி திறக்கின்றன என்று பள்ளிக்கல்வி
இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 177
தொடக்கப்பள்ளிகளும், 9 ஆயிரத்து750
நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. 5
ஆயிரத்து 602 உயர்நிலைப்பள்ளிகளும், 6
ஆயிரத்து 299 மேல்நிலைப்பள்ளிகளும்
இருக்கின்றன.
இந்த பள்ளிகளில் 6 லட்சத்திற்கும்
மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள்
வேலைபார்க்கிறார்கள். ஒரு கோடியே
40 லட்சம் மாணவ-மாணவிகள்
படிக்கிறார்கள்.பிளஸ்-2 தேர்வு கடந்த
மார்ச் மாதம் தொடங்கி மார்ச் 31-ந் தேதி
முடிவடைந்தது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி
தொடங்கியது. அந்த தேர்வு நாளை
(வெள்ளிக்கிழமை) சமூக அறிவியல்
தேர்வுடன் முடிவடைகிறது. ஏற்கனவே
பிளஸ்-1 தேர்வு நடந்து
முடிந்துவிட்டது. 6-வது முதல் 8-வது
வகுப்பு வரை உள்ள மாணவ-
மாணவிகளுக்கு தேர்வு வருகிற 20-ந்
தேதிமுடிவடைகிறது.
ஜூன் 1-ந் தேதி திறக்கின்றன
ஆனால் 22-ந் தேதி அரசு
உயர்நிலைப்பள்ளிகள், அரசு
மேல்நிலைப்பள்ளிகள்
முடிவடைகின்றன. 23-ந் தேதி முதல் மே
31-ந் தேதி முடிய கோடை
விடுமுறையாகும். தொடக்கப்பள்ளிகள்,
நடுநிலைப்பள்ளிகளுக்கு 30-ந் தேதி
வரைபள்ளிக்கூடங்கள் செயல்பட உள்ளன.
அந்த பள்ளிக்கூடங்களுக்கு மே மாதம் 1-ந்
தேதி முதல் மே மாதம் 31-ந் தேதி வரை
கோடை விடுமுறை விடப்பட
உள்ளது.தொடக்கப்பள்ளிகள்,
நடுநிலைப்பள்ளிகள்,
உயர்நிலைப்பள்ளிகள்,
மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும்
கோடை விடுமுறை முடிந்து ஜூன்
மாதம் 1-ந் தேதி திறக்கின்றன.
இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர்
ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment