Wednesday, April 22, 2015

பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

தமிழகத்தில் அனைத்து உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகளுக்கும்நடப்பு கல்வி
ஆண்டுக்கான இறுதி வகுப்புகள் இன்று
(புதன்கிழமை) முடிவடைகின்றன.
நாளை (23-ம் தேதி) முதல் மே 31-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும்கோடை
விடுமுறை விடப்படுவதாகவும், ஜூன் 1-ம்
தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்
என்று பள்ளிக்கல்வி இயக்குநர்
எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.
ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்
பள்ளிகளுக்கு மே 1-ம் தேதி முதல் கோடை
விடுமுறை விடப்படும் என்று
தொடக்கக்கல்வி இயக்குநரகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment