Monday, April 20, 2015

தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை

மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை
அதிகரிக்க நடப்பு கல்வியாண்டு
துவக்கத்திலேயே அரசு மேல்நிலைப்
பள்ளிகளில் தலைமை ஆசிரியர்
காலியிடங்களை நிரப்ப பள்ளிக்
கல்வித்துறை நடவடிக்கை
எடுத்துள்ளது.
அரசு உயர்நிலைப் பள்ளிகளில்
தலைமை ஆசிரியர்கள் 2012 வரையிலும்,
முதுகலை ஆசிரியர்கள் 2009
வரையிலான ஆசிரியர்களுக்கு தகுதி
அடிப்படையில் அரசு மேல்
நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக
பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது.
இதற்கான விபரங்களை
பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே
சேகரித்து அனுப்பியது.
இப்பதவி உயர்வு பட்டியலில்
குளறுபடிகளை தவிர்க்க, இறுதிக்கட்ட
ஆய்வு மேற்கொண்டு மீண்டும் பதவி
உயர்வு பட்டியல் ஒன்றை அனுப்பி
வைக்க, பள்ளிக் கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது. இதற்காக விடுபட்ட
விபரங்களை நேரில் வரவழைத்து
கல்வித்துறை ஊழியர்கள்
சேகரிக்கின்றனர்.
அதிகாரி ஒருவர் கூறுகையில், "நடப்பு
கல்வியாண்டில் ஜூனில் பள்ளிகள்
திறக்கும் நிலையில், மே மாத
இறுதிக்குள் பதவி உயர்வு பட்டியல்
வெளியிடப்பட்டு, காலி பணியிடங்கள்
நிரப்பும் திட்டம் உள்ளது. இதற்கான
கவுன்சிலிங் 2015 மே இறுதியில் நடத்த
கல்வித்துறை திட்டமிட்டுள்ளது"
என்றார்.

No comments:

Post a Comment