Tuesday, April 07, 2015

மாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணியில் 11 காலியிடங்களை நிரப்பு வதற்காக முதல்நிலைத் தேர்வு முடிவு இந்த வாரம் வெளியிடப்படும்

புதிய குரூப்-1, குரூப்-2
தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இந்த மாத
இறுதிக்குள் வெளியாகும் என்று
டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு)
சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 139 தட்டச்சர் பணியிடங்களை நிரப்பு வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில்
தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும்
இந்நிகழ்வுக்கு 383 பேர் அழைக்கப்பட்டிருக்
கிறார்கள். ஏற்கெனவே, குருப்-2 பணிகளில் 1,130 காலியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப் பும், இதேபோல், தோட்டக்கலை அலுவலர் பணியில் 183 காலியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ்
சரிபார்ப்பும் நடைபெற்று வருகிறது.
ஒரே நாளில் 3 விதமான பணி களுக்கு
சான்றிதழ் சரிபார்ப்பு நடை பெற்றதால்
டிஎன்பிஎஸ்சி அலுவலகத் தில் நேற்று
கூட்டம் அலைமோதியது. குரூப்-2
சான்றிதழ் சரிபார்ப்பு மே மாதம் 8-ம் தேதி
வரையிலும், தோட்டக்கலை அலுவலர்
சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய் வரையும்
நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்புப்
பணிகளை பார்வையிட்ட பிறகு
டிஎன்பிஎஸ்சி தலைவர்
பாலசுப்பிரமணியன் நிருபர் களிடம்
கூறியதாவது: மாவட்ட கல்வி அலுவலர்
(DEO) பணியில் 11 காலியிடங்களை நிரப்பு
வதற்காக முதல்நிலைத் தேர்வு கடந்த
ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது.
இத்தேர்வின் முடிவு இந்த வாரம்
வெளியிடப்படும். துணை ஆட்சியர்,
காவல்துறை துணை கண்காணிப்பாளர்
உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்படும்
குரூப்-1 தேர்வுக்கு 60-க்கும் மேற்பட்ட
காலியிடங்களும், அதேபோல், நக ராட்சி
ஆணையர், சார்-பதிவாளர், உதவி பிரிவு
அதிகாரி, உதவி தொழி லாளர் ஆய்வாளர்,
வருவாய் உதவி யாளர் உள்ளிட்ட
பதவிகளுக்காக நடத்தப்படும் குரூப்-2
தேர்வுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட
காலியிடங்களும் வரப்பெற்றுள்ளன. எனவே, புதிய குரூப்-1, குரூப்-2
தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இந்த
மாதம் இறுதிக்குள் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment