Wednesday, May 20, 2015

10-ஆம் வகுப்புத் தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம்.
மே 22 முதல் 27 வரை மாணவர்கள் தங்களது பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையபள்ளி மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத்துக்கு ரூ. 305-ம், பிற பாடங்களுக்கு ரூ. 205-ம் மறுகூட்டலுக்கான கட்டணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும் பணமாகச் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment