Tuesday, June 02, 2015

இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு முன் பணி நிரவல் மூலம் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு

அரசு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆன்லைன் இடமாறுதல்கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ளது.
இந்நிலையில்அனைத்து மாவட்டங்களிலும் இப்பள்ளிகளில் பாடவாரியாக உபரியாக உள்ள ஆசிரியர்களின்எண்ணிக்கை குறித்துகணக்கெடுத்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.அவர்கள்
தற்போதுள்ளகாலிப்பணியிடங்களில் பணி நிரவல்மூலம் நியமிக்கப்படஉள்ளனர்.மாவட்ட கல்வித்துறை உயரதிகாரிஒருவர் கூறுகையில்,""பள்ளியில் கூடுதலாகஉள்ள ஆசிரியர்கள்அந்த மாவட்டத்தில்வேறு பள்ளிகாலிப்பணியிடங்களிலோ , வெளிமாவட்டங்களிலோ நியமிக்கப்பட உள்ளனர். அதன்பின்னர் எஞ்சியகாலிப்பணியிடங்களை கணக்கிட்டு அதன்படிஇடமாறுதல் கவுன்சிலிங்நடத்தப்படும்,''என்றார்.

No comments:

Post a Comment