Wednesday, June 17, 2015

ஆதிதிராவிடர் நலப் பள்ளி இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

ஆதிதிராவிட பள்ளிகளில் இடைநிலைக் கல்வி ஆசிரியர்களுக்கான, 454 பேர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில், 1,096 ஆதிதிராவிடர்; 299 பழங்குடியினர் நலப்பள்ளிகள் உள்ளன.
இவற்றில், 669 இடை நிலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்தது.

கடந்த 2013ல், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.ஆனால், இதில், ஆதிதிராவிடர் மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்டோரையும் நிரப்பக்கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றம், தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது. பின், கடந்த ஏப்., 16ம் தேதி இடைக்கால தடை நீக்கப்பட்டு, 70 சதவீதம், அதாவது, 468 ஆசிரியர்களை பணியில் சேர்க்கலாம் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.தேர்வு முடிவுகளை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. இதில், 454 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்காக, 14 இடங்கள், 'ரிசர்வ்' செய்து வைக்கப்பட்டுள்ளன.ஆதிதிராவிடர், கள்ளர் நலப் பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் 454 பேர் கொண்ட முதல்நிலைத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்தி:ஆதிதிராவிடர், கள்ளர் சீர்திருத்தப் பள்ளிகளில் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை நேரடித் தேர்வு முறையில் பணியில் அமர்த்த 2014 ஆகஸ்ட் 21-ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டது. இப்போது, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இடைக்கால உத்தரவு, தமிழக அரசின் அனுமதியின் அடிப்படையில் இந்த முதல்நிலை தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ளவர்களின் தகுதி, உண்மை சான்றிதழ்கள் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பணி நியமன உத்தரவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment