Wednesday, July 01, 2015

ஆசிரியர் பயிற்சி டிப்ளமோஇன்று கவுன்சிலிங் துவக்கம்

ஆசிரியர் பயிற்சி, டிப்ளமோ படிப்புக்கான கவுன்சிலிங், இன்று முதல், 4ம் தேதிவரை நடக்கிறது.தமிழகத்தில்
, 440 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 15 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில், மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சிலிங், இணையதளம் வழியாக, இன்று துவங்கி, 4ம் தேதி முடிகிறது.
அனைத்து மாவட்டஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன அலுவலகத்தில் இந்த கவுன்சிலிங், காலை 9:00 மணிக்கு துவங்கும். விண்ணப்பதாரர்கள், ஒரு மணி நேரத்துக்கு முன் வந்துவிட வேண்டும் என, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்

No comments:

Post a Comment