Monday, August 17, 2015

PG,BT & SGT:ஆசிரியர் நியாமனம் குறித்த அறிவிப்பு சட்டசபை தொடரில் வெளியாக உள்ளது

TET புதிய பணியிட அறிவிப்பு வரும் சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TET வழக்கு வரும் செப்டம்பர் முதல் நாள் இறுதி விசாரணைக்கு வர இருக்கும் நிலையில்.இந்த ஆண்டிற்கான புதிய பணியிட அறிவிப்பு வரும் சட்டசபை கூட்டத்தில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.காத்திருப்போம் அனைத்தும் நன்மையாகவே முடியும்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 24ம் தேதி கூட உள்ள நிலையில்,கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இந்த கூட்டத்தெதொடரில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகும்.குறிப்பாக பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் புதிய நியமனம் குறித்த அறிவிப்பு இருக்கும்.எத்தனை பணியிடங்கள் என்பதை இப்போது கூறமுடியாது.அதே போல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment