சீனாவுக்குச் செல்லும் போதெல்லாம் அது எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று மற்றவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டு வியப்பில் ஆழ்ந்துவிடுவேன். சீனத்தில் முதலீடு செய்த உலக முதலீட்டாளர்கள் பலர் சொல்வதும் அந்த வகையில் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
“சீனா இன்றைக்கு மிகப் பெரிய பொருளாதார வல்லரசுபோலத் தோன்றலாம், எதிர்காலத்தில் அது ஓய்ந்துவிடும்” என்றே அவர்கள் கூறுகின்றனர். சீனத்தில் தொழில் வளர்கிறதோ இல்லையோ அதன் நகரங்கள் பலவற்றில் சுற்றுச்சூழல் மாசுஅதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாகவே அதன் தொழில்துறை வளர்ச்சி எதிர்காலத்தில் அதற்குப் பல சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம்.
மூன்று தசாப்தத் திட்டம்
சீனத்தைப் பற்றி நல்ல விதமாகவே நினைப்பவர்களும் இருக்கின்றனர். அவர்கள் சுட்டிக்காட்டுவதெல்லாம் இதுதான். “இன்றைக்கு நாம் பார்க்கும் சீன வளர்ச்சி ஒரே நாளில் ஏற்பட்டதல்ல. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அவர்கள் திட்டமிட்டு மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கைகளும் சேர்ந்துதான் இந்த வெற்றியை அவர்களுக்கு அளித்துள்ளன. கல்வித் துறையிலும் சாலை, இருப்புப் பாதைகள், தகவல்தொடர்பு, மின்சார உற்பத்தி, துறைமுகங்கள் போன்ற அடித் தளக் கட்டமைப்புத் துறையிலும் அவர்கள் மேற்கொண்ட முதலீடும் உழைப்பும்தான் இன்றைக்கு சீனத்தின் வேகமான வளர்ச்சிக்குக் கைகொடுக்கின்றன.”
இந்த இரண்டு கருத்துகளில் எது சரி என்று சிலர் பந்தயம் கட்ட முற்படலாம். ஆனால், நான் பந்தயத்துக்குத் தயாரில்லை. சீனாவின் இன்றைய வளர்ச்சிக்கு அது ஏற்கெனவே கல்வித் துறையிலும் அடித்தளக் கட்டமைப்பிலும் மேற்கொண்ட முதலீடுதான் காரணம் என்பதை உணர வேண்டும் என்றால், ஷாங்காய் நகரத் தொடக்கப் பள்ளிக்கூடங்களைப் பாருங்கள்.
‘டீச் பார் அமெரிக்கா’ என்ற இயக்கத்தின் நிறுவனர் வெண்டி காப்புடனும் ‘டீச் பார் ஆல்’ இயக்கத் தலைவர்களுடனும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அந்த இயக்கம் 32 நாடுகளில் செயல்படுகிறது. சீனத்தின் மிக நல்ல பள்ளிக்கூடங்களையும் மிக மோசமான பள்ளிக்கூடங்களையும் நேரில் பார்த்து ஆய்வு செய்வதுதான் இயக்கத் தலைவர்களின் நோக்கம். சர்வதேச அளவில் ஷாங்காய் நகரப் பள்ளிக்கூடங்கள் மட்டும் எப்படிச் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதை ஆராய முற்பட்டோம். 15 வயது மாணவர்களின் கணிதத் திறன், அறிவியல் பாடத்திறன், பாடம் படிக்கும் திறன் ஆகியவற்றை 65 நாடுகளிலிருந்து தேர்வுசெய்து சோதித்ததுடன் ஒப்பிட்டும் பார்த்ததில் ஷாங்காய் சிறப்பிடம் பெற்றது.
ஷாங்காய் பள்ளிகளின் ரகசியம் என்ன என்று கண்டுபிடிக்க அந்த நகரில் உள்ள குவாங்வெய் தொடக்கப்பள்ளியைத் தேர்வுசெய்தோம். அந்தப் பள்ளிக்கூடத்தில் மொத்தம் 754 மாணவர்கள் படிக்கிறார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருக்கிறது. 59 ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள். ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, மாணவர்களின் ஆர்வம், பெற்றோர்களின் ஒத்துழைப்பு ஆகியவை தவிர, வேறெதுவும் புதிதாக இல்லை என்று கண்டுகொண்டோம். அதாவது, ரகசியம் ஏதுமே இல்லை.
ஒரு பள்ளிக்கூடத்தின் தேவை
ஒரு பள்ளிக்கூடம் சிறந்து விளங்க வேண்டும் என்றால், எதெல்லாம் தேவையோ அதில் இடைவிடாமல் அக்கறை செலுத்தப்படுவதுதான் இந்தப் பள்ளிக்கூடங்களின் வெற்றிக்குக் காரணம். இந்தப் பள்ளிக்கூடத்தின் முதல்வர் ஷென் ஜுன் என்ற ஆசிரியை. இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரில் சுமார் 40% பேர் அடிக்கடி இடம் மாறி வேலைசெய்யும் சாதாரணத் தொழிலாளர்கள். அதிகம் கல்வியறிவு இல்லாதவர்கள். இந்தப் பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்கள் தங்களுடைய வேலை நேரத்தில் 70% நேரத்தைப் பாடங்கள் நடத்துவதிலும் 30% நேரத்தைக் கற்பிக்கும் திறனை மேம்படுத்துவதிலும் அடுத்து நடத்த வேண்டிய பாடங்களுக்காகத் திட்டமிடுவதிலும் செலவிடுகிறார்கள். அமெரிக்காவில் இருப்பதைவிட சீன ஆசிரியர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வு அதிகமாக இருப்பதைக் காண்கிறேன்.
தெங் ஜியோ இந்தப் பள்ளிக்கூடத்தில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறார். பள்ளிக்கூடம் காலை 8.35 மணிக்கே தொடங்கிவிடுகிறது. மாலை 4.30 மணி வரை நடக்கிறது. ஒரு நாளைக்குத் தலா 35 நிமிஷங்கள் என்று 3 பாடங்களை நடத்துகிறார் தெங் ஜியோ. மூன்றாவது வகுப்பில் அவர் பாடம் நடத்தும்போது நானும் மாணவர்களுடன் அமர்ந்து பின்னாலிருந்து கவனித்தேன். பாடத்தை நடத்துவது மிக அற்புதமாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. வகுப்பில் நேரம் வீணடிக்கப்படுவதில்லை.
“சீனா இன்றைக்கு மிகப் பெரிய பொருளாதார வல்லரசுபோலத் தோன்றலாம், எதிர்காலத்தில் அது ஓய்ந்துவிடும்” என்றே அவர்கள் கூறுகின்றனர். சீனத்தில் தொழில் வளர்கிறதோ இல்லையோ அதன் நகரங்கள் பலவற்றில் சுற்றுச்சூழல் மாசுஅதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாகவே அதன் தொழில்துறை வளர்ச்சி எதிர்காலத்தில் அதற்குப் பல சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம்.
மூன்று தசாப்தத் திட்டம்
சீனத்தைப் பற்றி நல்ல விதமாகவே நினைப்பவர்களும் இருக்கின்றனர். அவர்கள் சுட்டிக்காட்டுவதெல்லாம் இதுதான். “இன்றைக்கு நாம் பார்க்கும் சீன வளர்ச்சி ஒரே நாளில் ஏற்பட்டதல்ல. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அவர்கள் திட்டமிட்டு மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கைகளும் சேர்ந்துதான் இந்த வெற்றியை அவர்களுக்கு அளித்துள்ளன. கல்வித் துறையிலும் சாலை, இருப்புப் பாதைகள், தகவல்தொடர்பு, மின்சார உற்பத்தி, துறைமுகங்கள் போன்ற அடித் தளக் கட்டமைப்புத் துறையிலும் அவர்கள் மேற்கொண்ட முதலீடும் உழைப்பும்தான் இன்றைக்கு சீனத்தின் வேகமான வளர்ச்சிக்குக் கைகொடுக்கின்றன.”
இந்த இரண்டு கருத்துகளில் எது சரி என்று சிலர் பந்தயம் கட்ட முற்படலாம். ஆனால், நான் பந்தயத்துக்குத் தயாரில்லை. சீனாவின் இன்றைய வளர்ச்சிக்கு அது ஏற்கெனவே கல்வித் துறையிலும் அடித்தளக் கட்டமைப்பிலும் மேற்கொண்ட முதலீடுதான் காரணம் என்பதை உணர வேண்டும் என்றால், ஷாங்காய் நகரத் தொடக்கப் பள்ளிக்கூடங்களைப் பாருங்கள்.
‘டீச் பார் அமெரிக்கா’ என்ற இயக்கத்தின் நிறுவனர் வெண்டி காப்புடனும் ‘டீச் பார் ஆல்’ இயக்கத் தலைவர்களுடனும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அந்த இயக்கம் 32 நாடுகளில் செயல்படுகிறது. சீனத்தின் மிக நல்ல பள்ளிக்கூடங்களையும் மிக மோசமான பள்ளிக்கூடங்களையும் நேரில் பார்த்து ஆய்வு செய்வதுதான் இயக்கத் தலைவர்களின் நோக்கம். சர்வதேச அளவில் ஷாங்காய் நகரப் பள்ளிக்கூடங்கள் மட்டும் எப்படிச் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதை ஆராய முற்பட்டோம். 15 வயது மாணவர்களின் கணிதத் திறன், அறிவியல் பாடத்திறன், பாடம் படிக்கும் திறன் ஆகியவற்றை 65 நாடுகளிலிருந்து தேர்வுசெய்து சோதித்ததுடன் ஒப்பிட்டும் பார்த்ததில் ஷாங்காய் சிறப்பிடம் பெற்றது.
ஷாங்காய் பள்ளிகளின் ரகசியம் என்ன என்று கண்டுபிடிக்க அந்த நகரில் உள்ள குவாங்வெய் தொடக்கப்பள்ளியைத் தேர்வுசெய்தோம். அந்தப் பள்ளிக்கூடத்தில் மொத்தம் 754 மாணவர்கள் படிக்கிறார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருக்கிறது. 59 ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள். ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, மாணவர்களின் ஆர்வம், பெற்றோர்களின் ஒத்துழைப்பு ஆகியவை தவிர, வேறெதுவும் புதிதாக இல்லை என்று கண்டுகொண்டோம். அதாவது, ரகசியம் ஏதுமே இல்லை.
ஒரு பள்ளிக்கூடத்தின் தேவை
ஒரு பள்ளிக்கூடம் சிறந்து விளங்க வேண்டும் என்றால், எதெல்லாம் தேவையோ அதில் இடைவிடாமல் அக்கறை செலுத்தப்படுவதுதான் இந்தப் பள்ளிக்கூடங்களின் வெற்றிக்குக் காரணம். இந்தப் பள்ளிக்கூடத்தின் முதல்வர் ஷென் ஜுன் என்ற ஆசிரியை. இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரில் சுமார் 40% பேர் அடிக்கடி இடம் மாறி வேலைசெய்யும் சாதாரணத் தொழிலாளர்கள். அதிகம் கல்வியறிவு இல்லாதவர்கள். இந்தப் பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்கள் தங்களுடைய வேலை நேரத்தில் 70% நேரத்தைப் பாடங்கள் நடத்துவதிலும் 30% நேரத்தைக் கற்பிக்கும் திறனை மேம்படுத்துவதிலும் அடுத்து நடத்த வேண்டிய பாடங்களுக்காகத் திட்டமிடுவதிலும் செலவிடுகிறார்கள். அமெரிக்காவில் இருப்பதைவிட சீன ஆசிரியர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வு அதிகமாக இருப்பதைக் காண்கிறேன்.
தெங் ஜியோ இந்தப் பள்ளிக்கூடத்தில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறார். பள்ளிக்கூடம் காலை 8.35 மணிக்கே தொடங்கிவிடுகிறது. மாலை 4.30 மணி வரை நடக்கிறது. ஒரு நாளைக்குத் தலா 35 நிமிஷங்கள் என்று 3 பாடங்களை நடத்துகிறார் தெங் ஜியோ. மூன்றாவது வகுப்பில் அவர் பாடம் நடத்தும்போது நானும் மாணவர்களுடன் அமர்ந்து பின்னாலிருந்து கவனித்தேன். பாடத்தை நடத்துவது மிக அற்புதமாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. வகுப்பில் நேரம் வீணடிக்கப்படுவதில்லை.
No comments:
Post a Comment