பெங்களூரூ: நாட்டில் மேலும், 278 பல்கலைக்கழகங்கள், 388 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி தெரிவித்தார்.
பெங்களூருவில் நேற்று, அகில இந்திய உயர்கல்வி துறை அமைச்சர்கள் மாநாடு நடந்தது. மாநாட்டில், மத்திய மனிதவளமேம்பாட்டுத் துறை உயரதிகாரி அஷோக் தாகூர்
கூறியதாவது: மத்திய அரசின்,
முதன்மை திட்டத்தின் மூலம், நாடு முழுவதும்,
278 புதிய பல்கலைக்கழகங்கள் மற்றும் 388
கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இவை, 22
ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில்
திறக்கப்பட உள்ளன. மேலும், தனியார்
கல்லூரிகளை ஊக்குவிக்கும் வகையில்,
சிறந்த கல்லூரிகளை தேர்ந்தெடுத்து,
பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment