Tuesday, November 26, 2013

சென்னை சிபிஎஸ்இ பள்ளியில்படிக்கும் மாணவர்கள்எண்ணிக்கை அதிகரிப்பு

பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி பொதுத்தேர்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ கல்வித்துறை தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டு சென்னையில் சுமார் 1.8 லட்சம் மாணவர்கள் 10ம்
வகுப்பு தேர்வை எதிர்கொள்கின்றனர். கடந்த
ஆண்டை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளது. 80,000
பேர் 12ம் வகுப்புக்கான தேர்வுகள் எழுத உள்ளனர்.
இந்தாண்டு 20 சதவீத அதிகரித்துள்ளதாக
தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா,
மஹாராஷ்ட்ரா, கோவா, புதுச்சேரி ஆகிய
மாநிலங்களில் சிபிஎஸ்இ பள்ளிகள்
இயங்கி வருகின்றன.
பிற மாநிலங்களை விட சென்னையில் சிபிஎஸ்இ
பள்ளிகள் அதிகமாக இயங்கி வருவதால்,
இந்தாண்டு சிபிஎஸ்இ.பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த
மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக,
சென்னை மாவட்ட அலுவலர் சுதர்ஷன் ராவ்
தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment